Tuesday, January 24, 2017

மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி:


பாரம்பரிய பொங்கல் விழாவில் மெடோஸ் பள்ளி மாணவ,மாணவிகளின் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. 
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தன்முனைப்பு மிகவும் பாராட்டதக்கது.

பல்வேறு கலை மீட்டெடுக்க இவர்களின் செயல்பாடுகள் நம்மை நெகிழ்ச்சியடைய செய்தது....மாணவர்களுடன் இவருடைய உறவு ஒரு நல்ல குரு சிடர்களின் உறவை போன்றதாகவே வெளிப்பட்டது...

இப்பள்ளியால் மீட்டெடுக்கப்பட்ட கலைகள்   பின்வருமாறு:

ஒயிலாட்டம்
பறை இசைத்தல்
சிலம்பாட்டம்
புலியாட்டம்
களியாட்டம்
நாடகம் அரங்கேற்றல்
நாட்டுப்புற நடனம்
நாட்டுப்புற பாடல்
கும்மிப்பாட்டு
உறியடித்தல்
இன்னும் பல....


இவையனைத்தும் கற்க வழிவகை செய்துவிட்டு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மகிழும் தலைமையாசிரியரின் மாண்பு ஒரு நல்லாசியர் என்பதை பறைசாற்றுகிறது.....





நாட்டுப்புற நடனம்


புலியாட்டம்



 ஒயிலாட்டம்


தன் மாணவர்களுடன் தலைமையாசிரியர்

புலியாட்டம்


 சிலம்பாட்டம்




உறியடித்தல்



களியாட்டம்



தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு:


குழந்தைகளுக்கான மற்றொரு நிகழ்வாக அமைந்தது....சூல் என்னும் சூழலயில் புத்தகத்தின் படைப்பாளர் திரு.தர்மர் அய்யாவின் கலகல்ப்பான கதை சொல்லும் நிகழ்வு....

இந்நிகழ்வில் குழந்தைகளுக்கான மாற்று சிந்தனையை வளர்க்க கூடிய பல்வேறு கதைகள் சொல்லப்பட்டது....இக்கதையின் சிறப்பாக பார்க்கப்பட்டது என்னவென்றால் கதையின் முடிவிலிருந்து புது புது கதைகளை உருவாக்கும் சிந்தனைகளை குழந்தைகளுடன் புதுப்புது கதைகளுடன் பகிர்ந்து கொண்டார். மாணவர்களும் ஆர்வத்துடன் கேட்டு புதுப்புது கதைகளையும் உருவாக்கி மகிழ்ந்தனர்....


திரு.தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வின் ஒளி,ஒலிப்பதிவு:






பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்


பாரம்பரிய பொங்கல் விழாவில் மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுகளின் நினைவுட்டல் மற்றும் பல்வேறு பாடல்கள் வானகம் திரு.செந்தில் அவர்களால் மாணவர்களுடன் கூடி மகிழ்வடைந்த நிகழ்வு நடைப்பெற்றது, மேலும் மாணவர்களின் நினைவு திறனை மேம்படுத்தும் மிக நீண்ட பாடல் வாய்வழியாகவும்,கைசைகைகளுடன் பாடப்பெற்றது.. மாணவர்கள் தங்களுக்குள் விளையாடியும் மகிழ்ந்தனர்...

ஒளி,ஒலிப்பதிவு:





பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு:


  தேன்கனி  பொங்கல் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது நம்முடைய பண்டைய பாரம்பரிய பொருடகளின் கண்காட்சி...இந்நிகழ்விற்க்காக மெடோஸ் பள்ளியின் மாணவர்களின் பங்கு அளப்பறியது...இக்கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்ப்ட்ட அனைத்துப் பொருட்களும் அந்த மாணவர்களின் வீட்டு மச்சியிலிருந்து எடுக்கப்பட்டவை என மாணவர்கள் கூறினர்.....

இக்கண்காட்சியில் நம் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக பல்வேறு பொருட்களும் அதனுடைய தொன்மையும்,வரலாற்றையும் தாங்கி நின்று நாம் கை நழுவ விட்ட பெருமையை தன்னகத்தே கொண்டு நிற்பதாகவே இருந்தது....





















தேன்கனி பாரம்பரிய பொங்கல் விழா

தேன்கனி முப்பெரும் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தேன்கனி பாரம்பரிய பொங்கல் விழா:


விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் சார்பாக கடந்த பொங்கலன்று சிவகாசி எம்.புதுப்பட்டி அமைந்துள்ள மெடோஸ் மேனிலைப் பள்ளியில் மாணவர்களுடனும் இயற்கை ஆர்வலர்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்ப்ட்டது.....
இவ்விழாவில் தேன்கனி அமைப்பின் அங்கத்தினரும்,இயற்கை ஆர்வலர்களும்,சிறப்பு அழைப்பாளர்களும், மெடோஸ் பள்ளியின் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்....

பாரம்பரிய பொங்கல் விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது...

1.பாரம்பரிய பொங்கல் வைக்கும் நிகழ்வு
2.பண்டைய பாரம்பரிய பயன்பாட்டு பொருட்களின் மீட்டல் நிகழ்வு
3.பாரம்பரிய விளையாட்டு மற்றும் பாடல்கள்
4.தர்மர் அய்யாவின் கதை சொல்லி நிகழ்வு
5.மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி

1.பாரம்பரிய பொங்கல் வைக்கும் நிகழ்வு:

         

பொங்கலன்று காலை இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய தானியமான “குதிரைவாலி” தானியத்தில் மண்டை வெல்லத்துடன் இனிப்பான பொங்கல் பொங்க பொங்கல் விழா தொடங்கியது...







பொங்கல் பொங்கும் பொழுது அனைத்து அன்பர்களும் மகிழ்ச்சி பொங்க பறை இசை சூழ மகிழ்ச்சி ஆரவாரித்தனர்.

பொங்கல் நிகழ்வின் ஒலி.ஒளிப்பதிவு:

                           





அனைத்து அன்பர்களுக்கும் பாரம்பரிய பொங்கல் பரிமாறப்பட்டது....
அனைவரும் பாரம்பரிய பொங்கலின் சுவையை சுவைக்கும் பொழுது








தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி முப்பெரும் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா


தேன்கனி 150 வது உழவர் சந்தை விழா:

                       
                விருதுநகர் மாவட்ட தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் அங்கமான தேன்கனி உழவர் சந்தை கடந்த 150 வாரங்களாக செயல்பட்டுவருகிறது.150 வது தேன்கனி உழவர் சந்தை விழா கடந்த பொங்கல் அன்று சிவகாசி எம்.புதுப்பட்டி அமைந்துள்ள மெடோஸ் மேனிலை பள்ளியில் தேன்கனியின் முப்பெரும் விழாவாக கொண்டாப்பட்டது.....



விழாவில் இயற்கை வழி விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நமது 

பாரம்பரிய தானியங்கள் 

சிவப்பு அரிசி வகைகள்
கைகுத்தல் அரிசி வகைகள்
செக்கு எண்ணெய் வகைகள்
அவல் வகைகள்

பாரம்பரிய திண்பண்டங்கள்

சிறுதானிய காரவகைகள்
சிறுதானிய இனிப்பு வகைகள்
திரிகடுகம் கடலை மிட்டாய்
நவதானிய அல்வா

இயற்கை வழியில் விளைந்த
காய்கறிகள்
பழங்கள்   சந்தைப்படுத்தப்பட்டது

மாடிதோட்டம் பற்றிய விழ்ப்புணர்வு:



இவ்விழாவில் மாடித்தோட்டம் அமைத்தல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது

மாடித்தோட்டத்திற்க்கு தேவையான

பைகள்
விதைகள் மற்றும்

இயற்கை பூச்சிவிரட்டிகள்

பற்றிய விழ்ப்புணர்வு வழங்கப்பட்டது...



நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா
 தேன்கனி 150 வது உழவர்சந்தை விழா

தேன்கனி  பொங்கல் திருவிழா

நம்மாழ்வார் அய்யாவின் நினைவு நாள் விழா:

இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் நினைவுநாள் தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பின் சார்பாக சிவகாசி எம்.புதுப்பட்டியில் அமைந்துள்ள மெடோஸ் மேனிலை பள்ளியில் தேன்கனியின் முப்பெரும் விழாவாக கொணடாப்பட்டது......
இவ்விழாவில் நம்மாழ்வார் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றையும் அய்யாவின் அனுபவங்களையும் குழந்தைகளுக்கு புரியும் பக்குவத்தில் குழந்தை மொழியில் கலந்துரையாடினார் வானகத்தின் குழந்தை கல்விய்யில் பயிற்றுனர் திரு.வானகம் செந்தில் அவர்கள்


மேலும் அய்யாவின் புகைப்படத்துடன்கூடிய அய்யாவின் கருத்துகளை மாணவர்களின் பார்வைக்கும் பொது மக்களின் மனபதிவிற்காக காட்சிப்படுத்தப்பட்டது.....மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தபோது......








Monday, January 2, 2017

தேன்கனி களையெடுக்கும் & ஊடு உழவு பண்ணைக் கருவிகள் கண்காட்சி :

நம்மாழ்வார் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் ” தேன்கனி களையெடுக்கும் & ஊடு உழவு பண்ணைக் கருவி அறிமுகம் செய்யப் படுகிறது.


நம்மாழ்வார் ஐயா தன்னுடைய வாழும் கிராமம் திட்டத்தில் நமக்குத் தேவையான பண்ணைக் கருவிகளை நாமே செய்து சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இந்த கருத்தை அடிக்கடி நானும் வலியுறுத்தி வந்த நிலையில் தேன்கனியின் முன்னோடி இயற்கை விவசாயி அ.நாராயணன் அவர்கள் தனக்கு இருந்த பட்டறை வேலையின் முன் அனுபவத்தில் எளிய இந்த கருவியை வடிவமைத்துள்ளார்.
இந்த கருவியை பயன்படுத்தி என்னுடைய கால்கானியில் ஊடு உழவு செய்து, பாசிப் பயறு மற்றும் தட்டைப்பயுற்றை கடந்த 17-12-16 அன்று விதைத்தேன்.
இன்று 31-12-16 அன்று முதல் ஊடு உழவின் மூலம் முதல் களை யெடுக்கப் பட்டது.
இந்த கருவியை நாளை 1-1-17 வானகத்தில் காட்சிப்படுத்த இளம் விவசாயி நாராயணன் அவர்களை ஊக்கப் படுத்த உதவிய வானகம் குமார் ஐயா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...