Saturday, November 12, 2016

ஊரெங்கும் ஊர் சந்தைகள் பயிற்சி முகாம் :


( தேன்கனி மற்றும் வானகம் கல்விக்குழு இணைந்து
3நாள் பயிற்சி முகாம் : நவம்பர் 25 முதல் 27வரை, 2016 )

நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி இயற்கை வாழ்வு வாழ நினைப்பவர்களுக்கும், நகரத்தில் தற்போது சிக்கலான சூழலில் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் இயற்கை வாழ்வு வாழ விரும்புபவர் களுக்கும், இயற்கை விவசாயம் செய்து வருபவர்களின் வாழ்வாதரத்தை இன்னும் ஒருபடி உயர்த்துவதற்கான பதிவு இது.
நம்மாழ்வார் ஐயா போன்ற பலரின் கடும் உழைப்பிற்குப் பின்னால் இயற்கை வழி விவசாயம் பெரும் அளவு வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய சூழலில் விவசாயிகள் கடும் நெருக்கடியில் இயற்கை வழியில் உற்பத்தி செய்த பொருட்களை குறுகிய அளவு மட்டுமே இயற்கை அங்காடிகள் மூலமாக இயற்கை உணவுகளை நேசித்து உண்ண நினைப்பவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலான இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வழக்கமான சந்தையிலே விற்கும் சூழல் நிலைதான் பரிதாபத்துக்குரியது. காரணம் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்ற நஞ்சுகள் ஏதுமில்லாமல் பார்த்துப் பார்த்து உற்பத்தி செய்யும் உணவுகள் வழக்கமான வியாபாரிகள் கைக்கு கிடைத்தவுடன் இரசாயணங்களால் குளிப்பாட்டப் படுகிறது.
காரணம் நீண்ட நாட்கள் இருப்பு வைக்க வேண்டும். அப்போது தான் அதிக விலைக்கு விற்க முடியும்.
இந்த நிலையை மாற்ற விருதுநகர் மாவட்டத்தில் தேன்கனி இயற்கை விவசாயிகள் ஒன்றினைந்து கடந்த 5ஆண்டுகளாக இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், மரபு விதைகள் சேகரித்தல் & பகிர்தல், மாடித்தோட்டம் அமைத்தல், மரபு வழி மருத்துவம், குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி அளித்தல் என தங்களால் இயன்ற வேலைகளை ஒன்றிணைந்து செய்து வருகிறோம். இந்த பயணத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பயிற்சிகள் மூலமாக அனைவருக்கும் பகிர்ந்து வருகிறோம்.
இதன் விளைவால் இன்று தேன்கனி உழவர் சந்தை என்கிற அமைப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் 142 வார சந்தைகளின் மூலம் ஒவ்வொரு ஞாயிறும் உழவர்களே நேரடியாக சந்தைப் படுத்தி வருகிறோம்.
இதில் இயற்கை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம். தனக்கு கட்டுப்படியான விலையை தானே நிர்ணயம் செய்து கொள்ளலாம். எந்த கமிசனும் கிடையாது. நுகர்வோருக்கும் இயற்கை விவசாயிக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
சத்துமிகு (சிறு)தானிய மதிப்புக்கூட்டல் தயாரிப்புகள் :
*************************************************************************
விவசாயி விவசாயியாக மட்டும் இருந்தால் போதாது. முடிந்தவரை அவருக்கான சந்தையை அவரே உருவாக்கிக் கொள்ள வேண்டும். கூடுதலாக மதிப்புக்கூட்டலும் செய்ய கத்துக்கனும் என நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்.
அப்போது முழுப்பலனும் இடைத்தரகர், வியாபாரிகளுக்கு செல்லாமல் நேரடியாக விவசாயிக்கும், பொருளை உற்பத்தி செய்பவருக்கும், நுகர்வோருக்கும் கிடைக்கும்.
இன்று விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புக்கள் இளைஞர்களுக்கு ஏரளமாக உள்ளது.
உதாரணமாக நெல் மற்றும் சிறு தானியங்களை அரிசியாக மாற்றுதல், பயறு வகைகளை எண்ணெய்யாக மாற்றுதல், மாவு வகைகள் தயார் செய்தல், உணவுகள், மூலிகை சாறுகள், பழச்சாறுகள் , சூப்பூவகைகள் தயார் செய்தல், லட்டு, மாவு உருண்டை, பலகாரங்கள், அதிரசங்கள், முறுக்குகள் தயார் செய்தல்.
காடுகளில் கிடைக்கும் மூலிகைகளில் மூலிகை தேநீர் தயாரித்தல், குளியல் பொடி, பல்பொடி, சீக்க்காய் தயாரித்தல்,
பெண்களுக்கான நாப்கின்கள் தாயரித்தல், கதர் ஆடைகளில் குழந்தைகளுக்கு ஆடைகள் உருவாக்குதல்.
விதைகள் உற்பத்தி செய்தல், பரவலாக்குதல், தேன் பெட்டி மூலம் தேனி தயாரித்தல், திருமண மற்றும் விழாக்களில் உணவுகள் தயாரித்தல்.
மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைத்தல், குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி கற்றுக் கொடுத்தல், மரக்கன்று தயாரித்தல் என இன்னும் அடிக்கிக் கொண்டே செல்லாம்.
இவற்றில் பலவற்றை தேன்கனி மதிப்புகூட்டல் மற்றும் தேன்கனி பாரம்பரிய அறுசுவையத்தினர் செய்து வருகின்றனர். அவற்றில் கிடைத்த அனுபவங்களையும் பயிற்சி அளித்து வருகிறோம்.
பயிற்சி நாள் : 25-11-2016 முதல் 27-11-2016 வரை
பயிற்சி நன்கொடை : ரூ.2000/- ( தங்குமிடம், இயற்கை உணவு உட்பட)
பெண்களும் கலந்து கொள்ளலாம்.
தேன்கனி உழவர் சந்தை :
இதன் மூலம் இயற்கை விவசாயிகள் உற்பத்
ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி பயிற்சி &
& இயற்கை உணவகம் பயிற்சி ( Natural Food Restaurants ) " :
ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி :
******************************************************
இன்று இயற்கை விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களை சந்தைப் படுத்துவதில் விவசாயிகளுக்கும் இயற்கை அங்காடிகளுக்கும் ஒரு புரிதல் தேவைப்படுகிறது. நம்மாழ்வார் ஐயா போன்ற பல இயற்கை போராளிகளின் கடின உழைப்பிற்குப் பிறகு இன்றைய சமுதாயத்தில் மிகப்பெரும் கொள்கை புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்ளிலும், பத்திரிக்கைளிலும் உணவுகளில் உள்ள கலப்படம்பற்றியும் , நஞ்சு கலப்படம்பற்றியும், மரபணுமாற்ற உணவுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற நஞ்சான உணவுகள் (Packed Foods) சந்தையில் தொடர்ந்து திட்டமிட்டே பன்னாட்டு கம்பெனிகளால் மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பட்டு வருகிறது.
இது போன்ற உணவுகளை நாம் தொடர்ந்து உண்ணுவதன் விளைவு தெருவுக்குத் தெரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் அதிகரித்து புது புது நோய்கள் உருவாக்கப்படுகிறது. 3 வயதிலே சர்க்கரை நோய்கள், புற்று நோய்கள், சிறு வயதிலே பூப்பெய்தல், குறைப் பிரசவம், சத்துக்குறைபாடுகள், கண் பார்வை இழப்பு, இரத்த அழுத்தம் என நோய்களின் எண்ணிக்கை பெருக்கிக் கொண்டே செல்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் மாற்றாக இன்று மக்களால் பெரிதும் நம்பப்படுவது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வரும் இயற்கை அங்காடிகளைத் தான். ஆனால் இயற்கை அங்காடிகள் & இயற்கை உணவங்களில் இன்று அந்த நம்பகத் தன்மை என்பது கேள்விக் குறியாக உள்ளது என நுகர்வோரும் இயற்கை விவசாயிகளும் குறைகூறுவது ஒரு புறமிருக்கிறது.
முன்னொரு காலத்தில் ஒரு தொழிலை செய்வபர்கள் அந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களாக மற்றுமே இருந்து வந்தனர். ஆனால் உலகமயமாக்கல் என்பது ஏற்பட்ட உடன் ஒவ்வொன்றும் வணிகமயமாக்கப் பட்டுவிட்ட்து. அந்த வகையில் தகவல் தொழில்நுட்டபத்துறை சார்ந்த மற்றும் படித்த பலர் இயற்கை அங்காடிகள் என்கிற பெயரில் எது இயற்கை உணவுகள் என்றே தெரியாமல் தினம் தினம் அங்காடிகளைத் தொடங்கி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க அதை விட வேகத்தில் பல இயற்கை அங்காடிகள் நஷ்ட்த்தில் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறனர்.
நீங்களும் சுய தொழில் தொடங்க வேண்டுமா? முதலாளியாக வேண்டுமா என மார்கெட்டிங் கம்பெனிகள் விடுதிகளில் ( லாட்ஜ்) Import & Export பயிற்சிகள் அளிக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் பயிற்சி அளிப்பதற்கு காரணம் பெரும் கம்பெனிகளிடம் உள்ள பொருட்களை வாங்கி விற்கும் முகவர்களை உருவாக்குவது தான் என்பது அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று இயற்கை அங்காடிகளைத் திறந்து பெரும் நஷ்டம் அடைந்த பின்னர் தான் தெரியவருகிறது.
இதற்கு காரணம் என்ன?
புரிதல் தான். பொதுவாக மூடப்படும் இயற்கை அங்காடிகள் & இயற்கை உணவகங்கள் மூடப்பட்டத்தற்கான காரணம் என்ன என்பதைப் பார்த்தால் , இவர்களுக்கு விவசாயம் என்பதே தெரியாத நபர்களாக இருக்கின்றனர். மேலும் இன்றை பேசனாக மக்களிட்த்தில் இருப்பது ஆர்கானிக் உணவுதான்.
ஆகையால் நாமும் கண்ணைக் கவரும் கண்ணாடி ஸோரும், ஏசி போன்றவை பெரும்பணம் செலவிட்டு இயற்கை அங்காடிகள் & இயற்கை உணவகங்கள் அமைத்தால் லாபம் குவிந்து கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து கொண்டு பணம் வாங்கிப்போடலாம் என்கிற மனநிலை பலரிடத்தில் உள்ளது.
மறுபுறம் புரிதலுடன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்காடிகளும் & இயற்கை உணவகங்களும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சில சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்காடிகளில் இயற்கைபற்றிய புரிதல் இல்லாமல் ” மக்காசோளம் “ உணவாக விற்கப்படுகிறது.
சீனி , அதிலும் ஆர்கானிக் சீனி , Herbo Products, Packed Cookies, முக அழகு, தலை அழகு என ஒவ்வொன்றிற்கும் ஒரு இரசாயண கலப்புள்ள பல பொருட்கள் இயற்கை என்கிற பெயரில் விற்கப்படுகிறது. நன்கு விபரம் அறிந்த நுகர்வோர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இவர்களின் பெயர் கெடுவதோடு , நுகர்வோரின் மனநிலையும் இது தான் இயற்கை உணவு போல என்கிற பிம்பம் உருவாக்கப் படுகிறது.
இதற்கு மேலும் இவர்கள் விற்கும் பொருளின் விலையோ சாதரண மக்கள் இவர்களை நெருங்கி விட முடியாது. காரணம் இவர்கள் பொருளின் மீது வைக்கும் மரியாதையை விட தன்னுடைய அங்காடிகளின் அலங்காரத்திலும் , குளிரூட்டிகளிலும் செய்யப் படும் முதலீடும் அந்த இயற்கை உணவுப் பொருளின் விலைகளில் சேர்கிறது.
ஆனால் இவர்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்காவது கட்டுபடியான விலை அளிப்பார்களா என்பது கேள்விக்குறிதான் ?....
மேலும் இவர்கள் விவசாயிகளிடம் வாங்குவதை விட பெரு நிறுவன்ங்களிடம் வாங்குவது தான் அதிகம்.
மேலும் தங்களுடைய அங்காடிகளில் உள்ள உணவுகளை சமைக்கும் முறை மற்றும் அதனுடைய மருத்துவத் தன்மை கூட தெரிந்திருக்க வாய்ப்பு என்பது மிகக் குறைவு தான்.
நமது உழவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியிலும் அழிந்து போன பாரம்பரிய ரகங்களை மீட்டு, மறுஉற்பத்தி செய்யும் சிகப்பரிசியை எத்தனை அங்காடிகள் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. அதை விவசாயிகளிடமே நேரடியாக மாப்பிள்ளை சம்பா தவிர்த்து குறைந்த்து 25கிலோ வாங்க தயாரக உள்ளது ?
அரிசிகளில் மாப்பிள்ளை சம்பா தவிர்த்து வேறு ஏதாவது பெயர் தொரியுமா... புழுகல் பச்சை அரிசி வேறுபாடு தெரியுமா ?
இயற்கை அங்காடிகளில் விற்கும் பலகாரங்களில் எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது? பெரும்பாலும் ரீபைண்ட் ஆயில், ரைஸ் பிரான் ஆயில் தான். இனிப்பிற்கு சீனி, சுக்ரோஸ் தான். மைதா சிறிது ? இது சரியா?
மேலும் பாரம்பரிய காய்கறி ரகங்களை தேடிபிடித்து பயிரிடும் விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசம்....
தன்னுடைய அங்காடிகளில் விற்கும் பொருட்களை தன்னுடைய வீட்டில் சமைக்க பயன்படுத்தாமல் வெளிகடைகளில் வாங்கி உட்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தீர்வு தான் என்ன?.....
****************************
இயற்கை அங்காடிகள் நடத்தி வருபவர்களும், புதிதாக அமைக்கவிருப்பம் உள்ளவர்களும் முதலில் இயற்கைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டிருக்க வேண்டும். பின்னர் நம்மாழ்வார் ஐயாவின் வானகம் அல்லது முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை வழி விவசாயம்பற்றிய பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். முடிந்தவரை இயற்கை விவசாயம் செய்யக் கூடிய நபர்களாகவும் இருக்க வேண்டும்.
குறைந்தது தன்னுடைய வீட்டிலே வீட்டுத் தோட்ட செய்த அனுபவமாவது இருக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் தவிர்த்து மரபு வழி மருத்துவத்தை நடைமுறையில் கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும். பின்னர் சமூக பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நபர்களை சமூகத்தில் உருவாகும் போது நம்மாழ்வார் ஐயாவின் கனவு மெய்ப்படும்.விவசாயிகளின் வாழ்வும், நுகர்வோருக்கு நல்ல உணவும் அங்காடி நடத்துபவர்களுக்கு நல்வாழ்வும் கிடைக்கும்.
இது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் எங்களுடைய ” தேன்கனி வாழ்வியல் மையம் “ தொடர்ந்து இயங்கி வருகிறது. ”
“ எந்த மாற்றத்தை சமூகத்தில் எதிர்பார்க்கிறோமோ... அந்த மாற்றத்தை உன்னிடமிருந்தே துவங்கு “ என்கிற காந்தி அடிகளின் கருத்தை நம்மாழ்வார் ஐயா அவர்கள் எங்களுக்குள் விளைத்தன் விளைவாக , எங்களுடைய சொந்த ஊரான சிவகாசியில் அதன் வளர்ச்சி அசுர வேகம் கொண்டுள்ளது.
அதன் விளைவாக
1. காலையில் வீதியெங்கிலும் சமைக்காத முளைகட்டிய உணவுகள் & மூலிகை சாறுகள்
2. திரும்பும் பக்கங்மெல்லாம் பழ வண்டிகள் , கம்பங்கூழ் வண்டிகள்
3. ஞாயிறு தோறும் உழவர்களின் தேன்கனி நேரடி இயற்கை விளைபொருள் சந்தை
4. சிறுதானிய சிற்றூண்டிகள் & வழக்கமான உணவுகடைகளில் கூட பாரம்பரிய உணவுகள்
5. இயற்கை விவசாயப் பயிற்சிகள் & மாடித் தோட்ட அமைக்க பயிற்சிகள்
6. மகளிர் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய மரபுவழி மதிப்புக்கூட்டல் உணவுகள் என எங்களுடைய செயல்பாடுகளில் சில....
7. இளைஞர்களுக்கு சுய தொழில்கள்
இவை எங்களை விளம்பரப்படுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல....
இது போன்ற ” சின்ன மாற்றங்கள் தான் மிகப் பெரிய சமூக கட்டமைப்பை உருவாக்கும் ”என்கிற நம்மாழ்வார் ஐயாவின் கூற்றை மெய்பிக்க எங்களின் சிறு உழைப்பில் விளைந்தவை இவை. அதிகாராமும் அறிவும் ஓரிட்த்தில் இருக்காமல் அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற நம்மாழ்வார் ஐயாவின் சொல்லை நாங்களும் ஏற்று நடக்கிறோம்.
ஆகவே எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் , தகவலையும் , நல்மனிதர்களையும், சாறுக்கல்களையும், போராட்டங்களையும் அறிவையும் பகிர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது ஒரு நாளில் எங்களுக்கு கிடைக்கப் பெற்றவை அல்ல. எனவே நண்பர்களே இவையெல்லாம் தொலைபேசி வாயிலாக ஒவ்வொரு நபருக்கும் பகிர்வதென்பது எஙகளுடைய வேலைப்பளுவுக்கு நடுவே மிகக் கடினம் . ஆகவே ஒரே சிந்தனையுள்ள, ஒத்த கருத்துள்ள , இதை விட மாற்றுவழிகளுடைய நபர்களே ஒன்று கூடுவோம் ஒரு அனுபவ பயிற்சியில்......
ஆடம்பரமில்லா இயற்கை அங்கடி பயிற்சி &
சத்துமிகு (சிறு)தானிய மதிப்புக்கூட்டப்பட்ட உணவு தயாரிப்பு பயிற்சி ( பகிர்வு) நாள் :
*********************************************************************
நாள்: நவம்பர் 25, 2016 வெள்ளி காலை 10மணி முதல்
நவம்பர் 27 ஞாயிறு மாலை 3 மணி வரை
இடம் : தேன்கனி வாழ்வியல் மையம்
சாமிபுரம் காலணி, மகேஷ் மாவுமில், சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.
எளிய தங்குமிடம் & இயற்கை உணவுகள் வழங்கப்படும்.
பயிற்சியில் :
*****************
1. ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி நட்த்த தேவையான அடிப்படை புரிதல்கள்
2. இயற்கை வழி விவசாயம்பற்றியும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பாரம்பரிய உணவுகள்
3. சிறு தானியங்களில் செலவில்லாமல் மதிப்புக்கூட்டும் உணவுகளான லட்டு வகைகள், கார வகைகள், கருப்பட்டியில் செய்யப் படும் கருப்பட்டி தேன்கூழல் மிட்டாய், ஜீலேபி, சேவு வகைகள், அதிரசம், ரெடி தோசை மிக்ஸ், முளைகட்டிய நவதானிய சத்துமாவுகள் தயாரித்தல் போன்றவை
4. குளியல் பொடி, சீக்க்காய் பொடி, மசாலாப் பொடி, இட்லி பொடி, எள்ளு இட்லிப்பொடி, ஆவாரம்பூ தேநீர் பொடி, பல்பொடி போன்ற பல மதிப்புக்கூட்டல்கள்
5. மரபணுமாற்ற உணவுகளின் தீமைகள், எந்தெந்த உணவுகளை அங்காடிகளில் விற்பனை செய்யலாம், செய்யக் கூடாது.
6. அடிப்படை இயற்கை மருத்துவம் , உணவு மருத்துவம் & தொடு சிகிச்சை, யோகா சிகிச்சை
7. மாடி வீட்டுத்தோட்டம்
8. உணவுகள் தயாரித்து 142 வது தேன்கனி உழவர் வாரசந்தையில் சந்தைப்படுத்துதல் களப்பயிற்சி
9. சுவரில்லா கல்விமுறை அடிப்படையும் & அதன் தேவையும்…
10. சில இயற்கை வாழ்வியல் விவாதங்கள்.. இன்னும் பல…
மேலும் தேன்கனி உழவர் சந்தையில் நேரடி களப்பயிற்சியும், இயற்கை அங்காடி அமைத்திட தேன்கனி உழவர் நேரடி விற்பனை சந்தையின் வழிகாட்டுதலுடன் கூடிய ஆலோசனைகளும் அளிக்கப்படும்.
பயிற்று நர்கள் :
*********************
1.வானகம் நிர்வாக அறங்காவலர் “ திரு. குமார் “
2. மாற்றுக் கல்வியாளர் “ பாஸ்கர் ஆறுமுகம் “
3. திரு. ஞானசேகரன் தேன்கனி உழவர் சந்தை
4. திரு. முத்துக்குமார் தேன்கனி அறுசுவையகம்
5. மல்லிகா, வைத்தியர் கருப்பசாமி மற்றும் பலர்
6. ஜெகத் ராமன் தொடுசிக்கை அடிப்படை
7. மாடித் தோட்டம் முனியசாமி
8. இயற்கை விவசாயிகள் நாராயணன், சபாபதி, ஜெ.கருப்பசாமி
மற்றும் தேன்கனி வாழ்வியல் மையத்தின் செயற்குழு உறுப்பினர்கள்
பயிற்சியை சிவகாசி தேன்கனி உழவர் சந்தையின் உறுப்பினர்களும், வானகம் கல்விக்குழுவும் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) அளிக்கிறார்கள்.
பயிற்சிக்கான ( பகிர்வுக்கான)
நன்கொடை : ரூ. 2000/-
( இந்தக் கட்டணம் என்பது இலாபம் சம்பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கானது அல்ல. எங்களுடைய அமைப்பின் அடிப்படை நிர்வாக செலவுக்கும், பயிற்றுநர்களுக்கான போக்குவரத்து செலவுகள் மற்றும் பயிற்சி பெறுவோரின் இயற்கை உணவுகள் மற்றும் பழச்சாறுகள், மூலிகைகளுக்கான செலவுகள்..... )
கட்டணத்தை பயிற்சி வருமுன்னரே செலுத்துவது
எங்களுடைய கரங்களை வலுசேர்க்க உதவியாக இருக்கும்.
20 நபர்களைக் கொண்டு மட்டுமே
பயிற்சி நடத்தப் படும்.
முன்பதிவு அவசியம்.
முன்பதிவு கடைசி நாள் நவம்பர் 23 புதன்கிழமை
முன்பதிவு செய்ய & ஆலோசனை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
ஜெ.கருப்பசாமி 94435 75431 , ஞானசேகர் : 98431 27804 கார்த்திக் 99442 07220,
நல்லதொரு வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்க.வோம்.....
புகைப்படங்கள் : கடந்த காலங்களில் நடைபெற்ற பயிற்சிகளில் எடுக்கப் பட்டது.
நன்றி

Monday, November 7, 2016

இனி வார வாரம் பலகாரங்கள் 



தேன்கனி மதிப்புக்கூட்டல் தீபாவளிப் பலகாரங்கள் :
*********************************************************************
நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்.
பொருளை மதிப்புகூட்டல் என்பது மிக முக்கியமானது. அந்த துறையில் நாம் எப்போது பலம் வாந்தவர்களாக மாறுகிறோமோ அப்போது தான் இயற்கை வழி விவசாயம் ( வாழ்வியல்) என்பது முழுமையடையும்.
ஒரு விவசாயி என்பவர் முதலில் தானியத்தை தானியமாக விற்காமல் அரிசியாக விற்க முயலவேண்டும். பின்னர் அதை மாவாக மாற்றி விற்க வேண்டும்.
அது போல நிலக்கடலையை உடைத்து பருப்பாக விற்க வேண்டும். பின்னர் அதை எண்ணெய்யாக மாற்ற வேண்டும். அதன் பின் பருப்பை செக்கில் கொடுத்து எண்ணெய்யாக மாற்ற வேண்டும்.
பின் ஏற்கனவே உள்ள அரிசி மாவையும், தற்போது செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்யையும் சேர்த்து அதிரசமாகவும், முறுக்காவும், லட்டாகவும், மாவு உருண்டையாகவும் மாற்றி மதிப்புக் கூட்ட வேண்டும்.
அப்போது சமூகத்தில் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகும். மக்களுக்கு கலப்படமில்லா ஆரோக்கிய உணவுகள் அருகிலே கிடைக்கும். அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் மற்றும் பல உலக நாடு களிலிருந்தும் நமக்கு முற்றிலும் பழக்கமில்லாத Fast food என்கிற slow Poison food .
slow Poission food என்பது உற்பத்தி செய்ததிலிருந்து குறைந்தது ஒரு மாதம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம் பின் மாநிலத்தின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம் , பின் மாவட்த்தின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம், பின் ஊரின் மொத்த வியாபாரியிடத்தில் குறைந்தது 1மாதம் பின் சில்லறைக் கடைக்காரரின் கடையில் குறைந்தது 1மாதம் , இறுதியாக நுகர்வோரின் வீட்டில் ஃப்ரிட்ஜில் குறைந்தது 1மாதம் என குறைந்தபட்சம் 8 மாதமாவது உணவை உண்ண கால தாமதமாகும்.
அந்த இடைப்பட்டக் காலம் வரை உணவு எங்கும் கெட்டுப் போகாமலிருக்க எண்ணிக்கையிடங்காத அளவு இராசாயணங்களால் ( Preservatives ) குளிப்பாட்டப் படுகிறது. இதை உண்ணும் போது உணவுப் பாதைக்கு சென்று செரிமானமாகமல் கொழுப்பாக, கழிவாக உடலில் தேங்கி புற்றுநோயை உண்டாக்குகிறது.
மேலும் இது போன்ற உணவுகளை நாம் ஊக்குவிப்பதால் தான் இன்று உணவு தானியங்களின் பதுக்கல் அதிகரித்து விலைவாசி ஏற்றம் கட்டுப் படுத்த முடியால், தெருவுக்கு தெரு பலவித மருத்துவமனைகள் உருவெடுத்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டுமானால் நம்மாழ்வார் ஐயா கூறியது போல்
Food should be locally produced
உள்ளூரிலே உற்பத்தி செய்ய வேண்டும்
Food Should be locally Consumed
உள்ளூரிலே நுகரப்பட வேண்டும்
It Should be Fresh & Taste நமக்குப் பழக்கப் பட்ட உணவாகவும் சுவையானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் ஒருவர் உண்ணும் உணவு உலகில் ஏதோ ஒரு பகுதியில் விளைந்து உலகம் முழுவதும் பயணம் செய்து குறைதது 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து பின் தட்டில் உண்ண கொடுக்கப் படுகிறது.
தேன்கனி பாரம்பரிய அறுசுவைகயகம் :
********************************************************
இது போல் நம்மாழ்வார் ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் பெரிதும் தூக்கமிழந்து தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிய நபர்களில் ஒருவர் ” தேன்கனி க.முத்துக்குமார் ” . கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னால் இயன்றவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தான் மட்டும் நகரவில்லை. தன்னோடு சேர்ந்து ஒரு சமூகத்தையும் மாற்றம் அடைய செய்துள்ளார்.
தேன்கனி அமைப்பின் ஒரு பகுதியான தேன்கனி பாரம்பரிய அறுசுவைகயகம் என்று பலரை இணைத்து குழுவாக உருவாக்கி செயல்பட்டுவருகிறார்.
நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டுமே மாற்றக் கூடியது என்று பலர் நம்புவதுண்டு. ஐயாவிடம் நன்கு பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும் நம்மாழ்வார் என்பவர் இயற்கையை நேசித்து வாழத்துடிக்கும் எல்லா துறைகளிலும் வாழ்பவர்கள் மனதிலும் கருத்துக்களை விதைத்தவர்.
அத்தகைய ஐயாவின் கருத்துக்களால் , இளைஞர் முத்துக்குமார் ஐயாவிடம் பெற்ற பயிற்சியுடன் தன்னுடைய தந்தையார் நடத்தி வந்த வழக்கமான பலகாரக்கடையை இன்று பாரம்பரிய பலகாரக் கடையாக மாற்றி வருகிறார்.
மேலும் தேன்கனி வாழ்வியல் பண்ணையில் 1ஏக்கர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் குதிரைவாலி, சோளம் பயிரிடுகிறார். அதில் கிடைக்கும் பொருட்களுடன், தனக்குத் தேவைப்படும் மற்ற இயற்கை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள், செக்கு எண்ணெய்களை தேன்கனி உழவர்களிடம் நேரடியாகப் பெற்று அதை பலகாரகமாக மாற்றுகிறார்.
கடந்த 3ஆண்டுகளாக தேன்கனி உழவர் ஞாயிறு சந்தை, தெரிந்த இயற்கை அங்காடிகள், வெளியூர் நண்பர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக பண்டிகைகால ஆர்டரையும் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். அதன் பலனாக ஏற்கனவே இவருடைய பலகாரங்களை உண்டு சுவை பார்த்த மக்கள் கொடுத்த ஊக்கத்தினால் இந்த தீபாவளிக்கான முன்பதிவைத் தொடங்கினார்.
அவர் எதிர் கொள்ளும் சவால்கள் :
*********************************************
இன்று இரசாயன கலப்புள்ள பேக்கிரி உணவுகள் சந்தையை ஆக்கிரமித்து உள்ளது. அதற்கான விளம்பரங்கள், ஆடம்பரங்கள், வண்ணங்கள், சுவைகள், உணவு கெட்டுப் போகாமல் அதிக நாள் நிலைத்திருக்கும் தன்மை போன்றவைகள் மக்கள் மத்தியில் இதுதான் சரியான உணவு, ஆனால் உடலுக்கு ஏதோ கேடு செய்யத்தான் செய்கிறது என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளக் கூடியது.
இதற்கு அடுத்தபடியாக சரியான மாற்று என்று மக்கள் மட்டுமல்ல இயற்கை அங்காடிகள் கூட நம்புவது சிறுதானிய ரொட்டி ( cookies ) என்பதும், பாமாயில் அல்லது ரைஸ் பிரான் ஆயிலில் செய்த பலகாரங்கள், சிறுதானியங்கள் பயன்படுத்தி வெள்ளை சர்க்கரை மற்றும் பல இரசாயன்ங்கள் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் தான் இவைகளும்.
இது சரியா ? அல்லது பராவாயில்லையா ? என்பது சிந்திக்க வேண்டிய பகுதி….
நம்முடைய நலனுக்கு என்றைக்கு சமரசம்
ஆகிறோமோ அன்று தான் தீமையின் திசைகளில்
கால் வைக்கத் துவங்குகிறோம்...
இயற்கை வாழ்வியல் வழிகாட்டி “ கோ. நம்மாழ்வார்
ஐயா கூறிய இந்த வார்த்தையை ஆழமாக நாம் புரிந்து கொண்டோமேயானால் நாம் மாற்று என்கிற பெயரில் சமரம் அடைய மாட்டோம்.
இது போல் சமரம் என்பது சிறு அளவுகூட இருக்கக் கூடாது என்பது இளைஞர் முத்துக்குமாரின் கொள்கை.
அதன் படி பலகாரங்களுக்கான மூலப் பொருட்கள், சுவை, நிறம், கெட்டுப் போகாமல் பொருட்களின் தாங்கும் நாள் (Expiry date), உழைப்பு என்பது முழுவதுமே சவால் நிறைந்தது. அதற்கு அவர் கையாளும் முறையே மிக எளிமை.
இயற்கை இயல்பானது, அதற்கு ஆடம்பரம் கிடையாது. செயற்கைப் பூச்சுத் தேவையில்லை. செயற்கை மணம் தேவையில்லை என்கிற கருத்தை ஏற்பவருக்கு மட்டுமே விற்பனை செய்கிறார். வழக்கமான(பேக்கரி) உணவுகளை போல் இவரின் பலகாரங்களை எதிர் பார்ப்பவர்களுக்கு “ அவர் அளிக்கும் பதில் இது உங்களுக்கான உணவு அல்ல “
இத்தகைய சாவால்களைத் தாண்டி 3ஆண்டுகளாக பல்வேறு வகையான பலகாரங்களை உருவாக்கி வருகிறார். அத்தகைய அனுபவத்தோடு தேன்கனி குழுவில் இருக்கும் நண்பர்களின் பலகாரங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக நம்முடைய பாட்டி முற்காலத்தில் செய்து கொடுத்த கைப்பக்குவத்தில் இந்த தீபாவளிக்கு தேன்கனி சிறப்பு பலகாரங்களை உருவாக்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.



அவைகளின் பட்டியல் :
இனிப்புக்கள் :
******************
கருப்பட்டி நவதானிய திரிகடுகம் அல்வா
சீரக சம்பா அதிரசம்
பூந்தி லட்டு
வரகு கருப்பட்டி ஜிலேபி
வரகு கரும்பு சர்க்கரை ஜிலேபி
எள்ளு உருண்டை
கடலை உருண்டை
பேரீட்சை லட்டு
திரிகடுகம் கடலை மிட்டாய்
மாப்பிள்ளை சம்பா அவல் இனிப்பு மிட்டாய் பொரி
கார வகைகள் :
*******************
சாமை மிக்சர்
கேழ்வரகு மிகசர்
சாமை முறுக்கு சேவு
வரகு காரச் சேவு
குதிரைவாலி ரிப்பன் சீவல்
குதிரைவாலி ஓமப் பொரி
நவதானிய கருப்பட்டி சாக்குலேட்
மாப்பிள்ளை சம்பா அவல் காரப் பொரி
கேழ்வரகு முடக்கற்றான் கீரைப் பக்கோடா
இவையனைத்தும் சுத்தமான செக்கு கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் மட்டுமே பயன்படுத்தி சீனி, மைதா, கோதுமை துளிஅளவும் பயன்படுத்தாமல் செய்தார். மேலும் இரசாயணங்களும் பயன்படுத்தாமல் இயற்கை வழியில் விளைந்த நமது மண்ணின் பாரம்பரிய சத்துமிகு சிறு தனியாங்களான வரகு, சாமை, திணை, குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா அரிசி, எள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு சர்க்கரை, கருப்பட்டி, மண்ணை வெல்லை மற்றும் பயறு வகைகளால் பலகாரங்களைத் தயாரித்தார்.
இந்த உணவுகளை தயாரிக்க அவருக்குத் துணையாக தந்தை திரு. கணேசன் ஐயா, தாய் மாரித்தங்கம், தங்கை முனீஸ்வரி மற்றும் வைத்தியர் கருப்பசாமி, வனிதா, பாஸ்கர் குடும்பத்தினர் & பல வயதான பெண்களின் துணையுடன் குழுவாக தயாரித்தார்.
அந்தப் பலகாரங்களை கடந்த 10 நாட்களாக தேர்வு செய்யப்பட்ட சிவகாசி , விருதுநகர், இராஜபாளையம் , அருப்புக் கோட்டை, மதுரை, சென்னை, நெய்வேலி, கரூர், அரியலூர், கோவை போன்ற தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு நேரடியாகவும், இயற்கை அங்காடிகளுக்கும் லாரி சர்வீஸைப் பயன்படுத்தி அனுப்பியுள்ளார்.
வாழ்க்கையை உயர்த்திய தருணம் :
************************************************
இந்தப் பலகாரங்களை உண்ட சிவகாசியைச் சேர்ந்த நண்பரின் குடும்பத்தினர் தன்னுடைய மகளுடைய திருமணத்திற்கு சீதனமாக அளிக்கும் பலகாரங்களில் இது தான் இடம் பெற வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், செய்து கொடுக்க முடியுமா ?
இன்னொருவர் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்கு சாக்லோட் கொடுக்காமல் இனி இந்தப் பலகாரங்கள் தான் என்றார்.
இந்த நம்பிக்கை அவருடைய வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
இனி வார வாரம் பலகாரங்கள் :
******************************************
இனி ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளுக்குள் பலகாரங்களை ஆர்டர் செய்தால் வெள்ளிக் கிழமைகளில் அளிக்க உள்ளார்.
இயற்கை அங்காடி மற்றும் வெளியூர் நண்பர்களுக்கு கொரியர் அல்லது பார்சல் சர்வீஸில் அனுப்பத் தயாராகி உள்ளார்.
இயற்கையில் பணி செய்வோருக்கு
இயற்கை கூலி கொடுக்கிறது. அது தான் மனநிறைவு.
என்கிற நம்மாழ்வார் ஐயாவின் வரிகளை நினைவு படுத்துகிறார்.
இது மட்டுமல்ல நண்பர்களே உங்களாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்..
நன்றி..
தொடர்புக்கு :
தேன்கனி க.முத்துக்குமார் 97876 48002
https://www.facebook.com/profile.php?id=100013428186669
சிவகாசி.

Friday, October 14, 2016

தேன்கனி குடும்பநல திருவிழாவின் புகைப்படத் தொகுப்பு.....





Saturday, October 8, 2016

தேன்கனி வாழ்வியல் பள்ளி



ஊர் திரும்புதல் ( கிராமங்களை நோக்கி திரும்புதல் ) :

தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு, வானகம் கல்விக்குழு, குக்கூ குழந்தைகள் வெளி, கரிசல் கலைக்குழு மற்றும் மரபுவிதை நாடோடிகள் அமைப்புகள் இணைந்து நடத்தும் ஊர் திரும்புதல் பயிற்சி ( முதல் முயற்சியாக 1 நாள் வாழ்க்கையை கிராம சூழலில் வாழ்தல்)

பாரம்பரிய வாழ்வியல் & கலைத் திருவிழா & தேன்கனி வாழ்வியல் பள்ளி துவக்க விழா : 

Teaching ( கற்றுக் கொடுத்தல்) :
Teaching என்பது தன்னிடம் உள்ளதை கற்று கொடுக்க (திணிக்க) முயலுதல்.
Learning (கற்றல்) :
Learning எனபது தன்னக்குள் எழும் கேள்வி மூலமாக தானாகவோ அல்லது மற்றவரின் துணை கொண்டு கற்றலாகும்.
கல்வி :
கல்வி என்பது எப்போதும் கற்றலாகவே (Learning) இருக்க வேண்டும். அதைத் தான்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
என்று வள்ளுவர் கூறுகிறார். அப்போது தான் அறிவு என்பது ஊற்று போல உள்ளிருந்து ஊறும்.
இதைத் தான் நம்மாழ்வார் ஐயாவும் கல்வி என்பது கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துதல். அந்த சூழல் எனப்து கற்பதற்குத் தேவையான மாதிரிகள் அடங்கியது. பின்னர் கற்ற விரும்புவர் அந்த சூழலில் தனக்குள் எழும் கேள்விகள் மூலம் விடைகளை கண்டு பிடிப்பார் . கற்றலுக்கான சூழலாகத் தான வானகத்தை நம்மாழ்வார் ஐயா உருவாக்கியுள்ளார்.

தேன்கனி வாழ்வியல் பள்ளி :

ஆகவே தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பானது தன்னுடைய 5கால தொடர் பயணத்தில் இயற்கை விவசாயிகள், பண்ணைகள், மரபு வைத்தியர்கள், கல்வியாளர்கள், மரபு கலைஞர்கள், கலைகள் , உணவியல் நிபுணர்கள் தொடங்கி வாழ்க்கைக்குத் தேவையானவர்களையும் , வாழ்வதற்கான சூழலையும் உருவாக்கியுள்ளது.

அத்தகைய உயிர்ப்பான சூழலில் குழந்தைகளும், பெற்றோர்களும் வாழ விரும்பும் போது அந்த அறிவையும், அனுபவத்தையும் கைமாற்றிக் கொடுக்க முடியும். இதன் அடிப்படையில் தேன்கனி வாழ்வியல் பள்ளிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை 4முறை நடத்தி உள்ளோம்.


அதன் முடிவில் தேன்கனி வாழ்வியல் பள்ளியை வருகிற அக்டோபர் 11ம் தேதி விஜயதசமி விடுமுறை நாளான செவ்வாய்க் கிழமை அதிகாலை நம்முன்னோர்களின் வாழ்வியலான கிராமத்து சூழலில் தொடங்க உள்ளோம். அன்றைய தினம் பெற்றோர்கள், குழந்தைகள் என இருவருக்கும் முதலில் தேன்கனி பள்ளி வாழ்வியல் குறித்து அனுபவப் பூர்வமாக உணர்த்த உள்ளனர்.


நிகழ்ச்சி நிரல் :

• அதிகாலை 5 மணிக்கு எழுதல்

• காலைகடன் கழித்து, ஆலும் வேலுமுடன் பல் துலக்கல்
• குளிர்ந்த கிணற்று நீரில் மண் & மூலிகை குளி(ர்)த்தல்
• சாணம் கரைத்து முற்றம் தெளித்து அரிசி மாவுக் கோலம்
• கால் நடைகளுக்கு உணவளித்து, தோட்டத்தில் கள வேலை செய்தல்
• சூரிய வணக்கத்துடன் யோகாப் பயிற்சி
• நாட்டுக் கம்பங்கூழும், அவல் சர்க்கரைப் பொங்கலும், முளைகட்டிய தானியமும், மூலிகை தேநீருடன் காலை உணவு
• கும்மியாட்டத்துடன் மரக்கன்று நட்டு குழந்தைகள் கையால் தேன்கனி வாழ்வியல் பள்ளி துவக்குதல்
• பாரம்பரிய நெல்லில் பெரியோர் மடியில் அ தொடங்கி மற்றவை கற்றல்
• குக்கூ சிவராஜ் அண்ணனின் பாரம்பரிய விளையாட்டுகள், 
• கரிசல் குழுவினரின் பறையாட்டம், கோலட்டாம், சிலம்பாட்டம் மற்றும் பல...
• வானகம் செந்திலின் கபடி, பம்பரம், கிட்டி, உரி அடித்தல், விடுகதை விளையாட்டுக்கள் தொடங்கி பல பாரம்பரிய விளையாட்டுகள் ...
• தேன்கனி த.ஞானசேகர் ஐயாவின் சிறுதானிய பொங்கல், பாரம்பரிய அரிசி காய்கறி பிரியாணி, கூட்டு, தினைப் பாயசம், பழக்கூட்டு மற்றும் பலவற்றுடன் ம்திய உணவுசெய்ய கற்றுக் கொள்ளல். 
• கல்வி குறித்த நாடகம், சோ. தர்மன் ஐயாவின் கதைகள் அறிமுகம்
• தேன்கனி வாழ்வியல் கல்வி குறித்து எதிர்காலத் திட்டமிடல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் உரையாடல்

இடம் : 

தேன்கனியின் அய்யனார் இயற்கை விவசாயப் பண்ணை, மெப்கோ கல்லூரி அருகில், காரிச்சேரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.நாள் : அக்டோபர் 11, 2016 செவ்வாய்கிழமை 
காலை 5 மணி முதல் மாலை 6மணி வரை

பயிற்சி நன்கொடை : 

பெரியவர்களுக்கு : ரூ. 400/- தனி நபர் ( உணவு சேர்த்து )
குழந்தைகள் 12 வயதுக்குள் இருப்பவர்களுக்கு : ரூ.150/-

முன்பதிவு அவசியம்.

முன்பதிவிற்கு : 9443575431, 98431 27804, 9790279975, 99442 07220
மாற்றத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்....


www.thenkanivalviyalmaiyam.blogspot.in


புகைப்படங்கள் : தேன்கனி வாழ்வியல் பள்ளி கலந்தாய்வுக்கூட்டங்களில் பெற்றோர்களும், குழந்தைகளும் மகிழ்ச்சியாக விளையாடும் போது எடுக்கப் பட்டது.

Monday, October 3, 2016

 பண்டிகைகளும், சிறப்புகளும் :


பண்டிகை என்ற சொல்லைக் கேட்ட உடனே நினைவுக்கு வருவது கொண்டாட்டம் தான். நம் முன்னோர்கள் பண்டிகைகளின் போது நம் மண்ணின் வாழ்க்கை முறையையே வெளிப்படுமாறு சீறும் சிறப்புமாக கொண்டாடி வந்தார்கள். அதன் அடையாளமாய் பண்டிகை கால தோரணங்கள் வாழை தொட்டு மா, ஆவாரை, வேப்பை, துளசி, பீளைப்பூ, இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமானால் மானாவாரி பகுதியாக இருக்குமானால் அந்த பருவத்தில் விளைந்த பனை பூ , கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கன்னி போன்ற தானியங்களின் கதிரையே வழிபாட்டிற்குப் பயன்படுத்தி வந்தனர்.
நஞ்சை நிலப்பகுதியெனில் மஞ்சள், நெற்கதிர்கள், தென்னம்பூ, பழ மரங்களின் இலைகள் மற்றும் வாசனை பூக்களைப் பயன்படுத்தி வந்தனர்.
அவ்வாறே , பண்டிகை காலங்களில் தங்களின் உணவு - கலாச்சாரத்தையும் மண்ணின் வாழ்வியலையும் இணைத்தே வாழ்ந்து மகிழ்ந்தனர்.
இதன் காரணமாக விழாக்கள் என்பது பலரின் வாழ்விலும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது. காரணம் இவ்விழாக்களில் பயன்படுத்தப்படும் விதைகள், அலங்காரப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள், மண் மற்றும் கல் பாத்திர வகைகள் என அனைத்தும் நம் தாத்தன் பூட்டன் கால வாழ்க்கை முறையை நினைவில் வகைவகையாய் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதனால் உள்ளூரில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டு , விவசாயிகளின் பொருட்களுக்கு மற்றைய நாட்களை விட பண்டிகை நேரங்களில் கூடுதல் ஊக்கம் கிடைக்கப் பெற்றது. மேலும் உள்ளூரின் சிறு தொழில்களான எண்ணெய் ஆட்டும் செக்கு இயந்திரம் தொடங்கி, அரவை மில்கள் ( ரைஸ்மில்), தையல் கூடங்கள், துணிக்கடைகள் , மிட்டாய் கடைகள், மளிகைக் கடைகள் ... என கூட்டம் அலை மோதும்.
இதனால் நம் அண்ணன், தம்பி, மாமான், சித்தப்பன் என இரத்த உறவுகள் தொடங்கி நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரார்கள் என அனைவரும் ஏதாவது ஒரு வழியாலாவது பயன் அடைவார்கள். பெரும்பாலும் பயன்கள் ” பண்ட மாற்றாகவே “ இருக்கும்.
ஆனால், இன்று மனித வாழ்வு நவீனம், நாகரீகம், கெளவரம், உயர்வு, தாழ்வு என்கிற வணிக வலையில் சிக்கி உள்ளது. இதனால் நம்முடைய மண்ணின் வாழ்வியலை நாமே இழிவாக்கி , வெளிநாட்டு வணிக கலாச்சாரத்தால் ஆரோக்கியம் இழந்து, நம்முடைய சம்பாத்தியம் மற்றும் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த கூட்டு வாழ்க்கை முறையை இழந்துள்ளோம். இதனால் பெரு நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்குமே கொள்ளை லாபம். நாம் வெறும் நுகர்வோராக மட்டுமே மாற்றப் பட்டுள்ளோம்.
அதற்கு சாட்சியாக நாம் இழந்த பாரம்பரிய பொருட்கள் மற்றும் நம்மை நம்பி வாழ்ந்த சக தொழில் முனைவோர்கள் என பலவற்றைப் பார்ப்போம்.
• மண் & கல் பாண்டங்களையும் ,செப்புப் பாண்டங்களையும் இழந்தோம். மாறாக பிளாஸ்டிக், நான்ஸ்டிக், என ஆனோம். இதனால் சுற்றுசூழல் கெட்டு கம்பெனிகள் மட்டுமே லாபத்தில் கொழுத்தன. மண் குயவர்கள் வாழ்விழந்தனர்.
• உள்ளூரில் விளைந்த பருத்தி ஆடைகளும், இயற்கை சாயங்களும் அழிக்கப்பட்டு குடிநீரை ஆதாரங்களை அழித்தோம். பெரும் கம்பெனிகளின் ஜட்டி தொடங்கி அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் கழிவுகளால் வீடு நிரம்பியுள்ளது. விளைவு உள்ளூர் விவசாயி தொடங்கி நம்முடைய சகோதர சகோதரிகளின் டெயலரிங் வரை வாழ்வு தொலைந்துள்ளது.
• நம் மண்ணின் கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, காடைக்கன்னி, பாரம்பரிய அரிசி , பருப்புகளின் பயன்பாடுகள் குறைந்து சர்க்கரை நோய் தொடங்கி கேன்சரை வரவழைக்கும் மைதா வரை கெட்டுப் போகாத அளவிற்கு இரசாயண நஞ்சுகளால் பேக்கிங் செய்யப்பட்ட சாக்குலேட், பிஸ்கட், விலங்குகளின் கொழுப்புகள், ஐஸ்கிரிம்கள் மற்றும் பேக்கிரி உணவுகளால் பல்வேறு நோய்களுக்கு சொந்தக் காரர்கள் ஆகினோம்.
• உள்ளூரின் விவசாயி & செக்கு இயந்திரத்தினால் கிடைத்த நல்ல கொழுப்புகள் நிறைந்த ஆரோக்கிய எண்ணெய்களை தொலைத்து விட்டோம். மாறாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய கழிவுகள், விலங்குகளின் கொழுப்புகள், மரபணு மாற்றம் செய்யப் பட்ட பயிர்கள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் என்கிற பெயரில் ஒரு மெல்லக் கொல்லும்(slow Poison), பாமாயில் போன்ற விஷம் கிடைக்கப் பெற்றோம்.
• அதற்கும் மேலாக இந்த மகளுக்கு காரம் பிடிக்கும் , அந்த மகனுக்கு அதிரசம், பேரனுக்கு முறுக்கு, பேத்திக்கு லட்டு என அன்போடும், ஆரோக்கியத்தோடும் செய்து கொடுத்து, நம்மை நேசித்த பாட்டிமார்களை இழந்தோம். மாறாக டிவியில் காட்டப்படும் கவர்ச்சிப் உணவுகளுக்கு மயங்கி யாருடைய நலனிலும் அக்கறை கொள்ளாது, தன்னுடைய லாப நலனை மட்டுமே பெருக்க நினைக்கும் கம்பெனி உணவுகளுக்கு அடிமையானோம்.
• பாட்டியின் ஞானத்தில் கிடைத்த செக்கு எண்ணெயின் குளியல்கள் மறந்து , மூலிகை சீகைக்காய், குளியல் பொடிகளைத் தொலைத்தோம். மாறாக சோப்பு, ஷாம்பு என மயிறோடு சேர்த்து முன்னோரின் அறிவையும் ஆரோக்கியத்தையும் இழந்தோம்.
மாற்று என்ன ?
இப்படியே இழந்தவற்றையெல்லாம் அடிக்க்கிகொண்டே போவதை விட இதற்கெல்லாம் என்ன மாற்று…. இழந்தவற்றைப் பெறுவது எப்படி ? என்று சிந்திப்பதே சிறந்தது. நம்முடைய முன்னோர் தொடங்கி இயற்கை வாழ்வியல் வழிகாட்டி கோ. நம்மாழ்வார் ஐயா அவர்கள் வரை அனைவரும் கற்றுக் கொடுத்த சுய சார்பு வாழ்வியலைப் பின்பற்றினாலே போதும்….
அதற்கு அனைவரும் தன்னை சுற்றி நடக்கும் இயற்கை வாழ்வியல் மாற்றங்களையும், அதற்காகத் தன்னை அற்பணிவரையும் அடையாளம் கண்டு அவர்களின் சிறு சிறு முயற்சிக்கு ஊக்கம் அளித்தாலே போதும்.
மாற்றும் என்பது சொல் அல்ல.. செயல்…
ஆகையால் தான் தேன்கனி உழவர் கூட்டமைப்பானாது பிரச்சாரத்தோடும் சொல்லோடும் என்றும் நிற்பதில்லை. ஆங்காங்கு சிறிய அளவிளேனும் செயல் படுபவர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும். அதன் வெளிப்பாடு தான் தேன்கனி தனது மூன்றாவது ஆண்டில் வெற்றி அடியெடுத்து வைப்பதோடு, இயற்கை வழி உழவர்களையும், மக்களையும் கூட்டமைப்பாக மாற்றி வாழ்வியல் அறிவையும், ஆதாரங்களையும் கைமாற்றிக் கொடுக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக இனி வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நம் முன்னோர்களின் ”சுயசார்பு வாழ்வியல் முறையை” பின்பற்ற உள்ளோம். அதில் ஏற்கனவே கூறியவாறு பாரம்பரிய விதைகள், அலங்காரங்கள், உணவில் சீர்(சிறு) தானியங்கள், பருப்புகள், பாரம்பரிய அரிசிகள், செக்கு எண்ணெய்கள் , பாரம்பரிய தின்பண்டங்கள் , ஆடைகள் , மண் பொருட்கள், தொழில் முறைகள், கலைகள், விளையாட்டுப் பொருட்கள் என நம்மால் எட்ட முடியும் இலக்குகள் வரை அனைத்தையும் அடைவது என உறுதி பூண்டுள்ளோம்.
அதை இயற்கை வாழ்வியலின் தந்தை தேசப் பிதா மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தேன்கனியின் 130 வார உழவர் சந்தையில் காட்சிப் படுத்த உள்ளோம்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் நேரிலும், மற்றவர்கள் கொரியர் அல்லது லாரி போக்குவரத்தின் மூலம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்.
உங்கள் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் உறுதி செய்ய நாங்கள் தயாரக உள்ளோம். எங்களை ஊக்கப்படுத்தவும், எங்களோடு கரம் கோர்க்கவும் நீங்கள் தயாரா ?
குறிப்பு :
***********
இரசாயண கலப்பில்லா பாரம்பரிய உணவுகளின் தன்மை, சுவை, குணம், இருப்பு வைப்பதற்கான பக்குவம் மற்றும் கால அளவுகளை உணர்ந்திருத்தல் நலம். அல்லது ஏற்றுக் கொள்ளப் பழகுதல் நலம்.
மீட்கப்பட்ட பாரம்பரிய வாழ்வியலின்
அடையாளங்களில் சில :
( டால்டா, ரைஸ்பிராண்ட் ஆயில், பாமாயில், இரசாயண நிறமூட்டிகள், மைதா, சீனி, அஜீணோமோட்டா இல்லாமல் நமது மரபு தானியங்கள் கொண்டு இயற்கை இனிப்புகளான பனங்கருப்பட்டி, கரும்பு சர்க்கரை, செக்கு கடலை எண்ணெய் கொண்டு தயாரிக்கப் பட்டது.
இவற்றை உங்களின் அன்பிற்கினியவர்களுக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் நிறுவனங்களில் தங்களுடன் பணி புரிபவர்களுக்கென அன்பளிப்பு அளிக்கலாம்.
மேலும் இயற்கை அங்காடிகளுக்கு & கூட்டு குடும்பங்களுக்கும் மொத்தமாக தேவையெனில் சிறிய அளவில் சலுகை விலையில் கிடைக்கும். முன்பதிவு அவசியம். பணம் முன்கூட்டியே கொடுக்க வேண்டுகிறோம்.)


1. மரபு இனிப்பு வகைகள் :
*****************************************
• திணை அதிரசம்
• வரகு ஜிலேபி
• எள்ளு உருண்டை
• திரிகடுகம் கடலை மிட்டாய்
• நிலக்கடலை உருண்டை
• மாப்பிள்ளை சம்பா பொரி மிட்டாய்
• பாதம் பேரீச்சை லட்டு
• கருப்பட்டி நவதானிய அல்வா
• திரிகடுகம் பொரிகடலை மிட்டாய்
• திணை இனிப்பு சீடை (கேக்)
இவை அனைத்தும் கலந்த கலவை கொண்ட பெட்டி
2. மரபு பலகார வகைகள் :
*****************************************
• சாமை அரிசி மிக்சர்
• குதிரைவாலி சீவல்
• கேழ்வரகு ரிப்பன் முறுக்கு
• வரகு காரச்சேவு
• சாமை முறுக்கு சேவு
• கேழ்வரகு முடக்கற்றான் பக்கோடா
• மாப்பிள்ளை சம்பா காரப் அவல் பொரி
• காரப் பாசிப் பயறு & வறுத்த கடலை பருப்பு
• கேழ்வரகு காரப் பூந்தி
இவை அனைத்தும் கலந்த பெட்டி
3. மரபு பலகாரங்களுக்கான மூலப் பொருட்கள் :
************************************************************************
மேல குறிப்பிட்டுள்ள பலகாரங்கள் போல் இன்னும் ஏராளமான பலகாரங்களை நீங்களே குடும்பத்தோடு தயார் செய்யத் தேவையான மூலப் பொருட்களை மொத்தமாக மற்றும் சில்லறை விலைக்கும் தருகிறோம்.
• செக்கு கடலை , நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், தீட்டாத(பாலிஸ் செய்யாத) சீர் தானியங்களான வரகு, சாமை, குதிரைவாலி, தினை, பனிவரகு பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி
• சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுணி, மூங்கிலரிசி, காட்டுயானம், கைவர சம்பா, பாஸ்மதி, கருங்குறுவை, பூங்கார் போன்ற பல பாரம்பரிய அரிசி மற்றும் அவல் வகைகள்
• சுண்டல் செய்யத் நாட்டு உளுந்து, நாட்டுப் பாசி, கொண்டக்கடலை, கொள்ளு , முளை கட்டிய செம்மண் துவரம்பருப்பு , பாசிப்பருப்பு, இட்லி உளுந்தபருப்பு, கடலை பருப்பு மற்றும் நிலக்கடலை வகைகள்
• பனங்கருப்பட்டி, கரும்பு சர்க்கரை, பனைகற்கண்டு வகைகள்
4. குளியலுக்குத் தேவையானவைகள் :
***********************************************************
• செக்கு நல்லெண்ணெய், மூலிகை சீகைக்காய், 22 பொருட்கள் அடங்கிய குளியல் பொடி, பூசு மஞ்சள் மற்றும் பல கிடைக்கும்
5. உடனடித் தாயரிப்புகள்
*****************************************:
• மாப்பிள்ளை சம்பா அவல் & சிறு தானிய அவல், சேமியா வகைகள்
• ஆவாரம்பூ சுக்கு மல்லி மூலிகை குடிநீர் பொடி
• நவதானிய சத்துமாவு வகைகள், சீர் தானிய முளைகட்டிய தோசை வகைகள், பலதானிய அடை கலவை, முளைகட்டிய உளுந்த களி மற்றும் சீர்தானிய வரகு, சாமை, குதிரைவாலி களி வகைகள்
இன்னும் ஏராளமான இயற்கை வழி மற்றும் இராசயண கலப்பில்லா பொருட்கள் நமது “ தேன்கனி உழவர் சந்தை மற்றும் தேன்கனி பாரம்பரிய அறுசுவையகத்தில் கிடைக்கும்.
தொடர்புக்கு : 978764 8002, 94435 75431,
98431 27804, 99442 07220
நீங்கள் விரும்பினால் உங்கள் பகுதியிலும் இது முயற்சிகளை முன்னெடுக்க எங்களுடைய அனுபவங்களை கைமாற்றிக் கொள்ளவும், பயிற்சி அளிக்க தயாராகவும் உள்ளோம். 2 மாதத்திற்கு ஒரு முறை 3 நாள் மதிப்புக்கூட்டு களப்பயிற்சி அளித்து வருகிறோம்.
உங்கள் ஊரைச் சுற்றியுள்ள பாரம்பரிய உணவு, கலை, விளையாட்டு, அலங்காரம் மற்றும் நம்முடைய பாரம்பரியத்தை மீட்கும் பணியில் உள்ளவர்களை வரும் பண்டிகைகளை முன்னிட்டாவது அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களோடு கரம் கோர்க்கவும் தயாங்காதீர்கள்.
இது நம்முடைய சந்த்திக்காக தற்சார்பு வாழ்வியலை அடையாளங்காணும் சிறு முயற்சி...

Friday, September 30, 2016


தேன்கனி வாழ்வியல் பள்ளி தொடக்கவிழா &

கலந்தாய்வுக் கூட்டம்

வாழ்தல் & பிழைத்தல் :
வாழ்தல் என்பது நுகர்வுக்கு அடிமையில்லாமல் சுயசார்பாகவும், மகிழ்வுடனும், பலருக்கும் பயன்படும்படியும் இயற்கையோடு இனிமையாக சலிப்பு இல்லாமல் இருத்தலாகும். ஆனால் பிழைத்தல் என்பது விபத்து நடந்து வலியுடனும், வேதனையுடனும், துன்பத்துடனும் , வெறுப்புடன் இருப்பது.

நம்முடைய & குழந்தைகளுடைய வாழ்க்கை என்பது இன்று வாழ்தலாக உள்ளதா ? அல்லது பிழைப்பாக உள்ளதா ? என்று எண்ணிப்பாருங்கள்.
தேன்கனி வாழ்வியல் பள்ளி :
===============================
இதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் ” மாற்று கல்வி வளர்ச்சி ” கண்டு வருகிறது. இந்த சுவரில்லா கல்விமுறையை பகுதிவாரியாக செயல்படுத்தும் விதமாகவும், அதற்கான முன் தயாரிப்புப் பணிகளை செயல்படுத்தும் வேலைகளையும் “ வானகம் நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவத்தின் கல்விக்குழு ” செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 11,2016 விஜயதசமியன்று சிவகாசியில் ”தேன்கனி வாழ்வியல் பள்ளி “ துவங்க உள்ளோம்.
உங்கள் பிள்ளைகள் எந்தக் கல்விமுறையில் பயின்றாலும், ” தேன்கனி வாழ்வியல் பள்ளியில் “ பகுதிநேரமாக இணைந்துகொள்ளலாம். வார இறுதிநாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் வாழ்வியல் பள்ளி இயங்கும். இங்கே போட்டி இல்லை, தேர்வுகள் இல்லை. சக உயிர்களோடு இணைந்து வாழும் பண்புகளையும், அஞ்சாமல் சுயமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதே வாழ்வியல் பள்ளியின் நோக்கங்கள். இவற்றிற்கேற்றவாறு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகளில் மட்டுமே பாடங்கள் நடத்தப்படமாட்டாது.
நம்முடைய உணவை தாமே இயற்கை முறையில் நஞ்சில்லாமல் உற்பத்தி செய்ய இயற்கை விவசாயம் , மாடித்தோட்டம், மரக்கன்று நடுதல் , மூலிகைகள் வளர்த்தல் போன்ற களப் பயிற்சிகள் இயற்கை விவசாயப் பண்ணைகளிளே நட்த்தப்படும்.
மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு உடல் நலப் பயிற்சிகள் (யோகா, தியானம் உட்பட ) அளிக்க இருக்கிறோம். பசி, தாகம், மலம் கழித்தல், சிறுநீர்ப் போக்கு, சளி, காய்ச்சல் ஆகியவைகளை தெளிவுபடுத்தும் பாரம்பரிய மருத்துவ அறிவு ஆகியவை எல்லாம் பாடத் தலைப்புகள். தமக்கான உடல்நலத் தேவைகளைத் தாமே கையாளும் வகையில் ”பாரம்பரிய மருத்துவ முறை “ கற்றுத் தரும் முறை இது.
சிலம்பம், ஒயிலாட்டம், கோலாட்டாம், பொம்மலாட்டம், சுயமாக பாடும் திறன், எழுதும் திறன், கற்கும் திறனை அதிகரிக்கும் பாரம்பரிய கலைகள், உடலை வலுப்படுத்தி கூட்டு வாழ்க்கையை வாழ கபடி, நினைவாற்றலை அதிகரிக்கும் விடுகதை விளையாட்டுகள், மேடை பேச்சு, நடிக்கும் நாடக கலைகள் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்…
வயதுக்கேற்றவாறு தொழிற் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன. வீட்டிற்குத் தேவையான பொருட்களைச் செய்துகொள்ளும் முறைகள் பயிற்சியளிக்கப்படும். பற்பொடி, சோப்பு போன்ற சிறுபொருட்களை எல்லாம் உங்கள் பிள்ளைகளே உங்கள் குடும்பத்திற்குத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதற்கான செய்முறைகள் அனைத்தும் கற்றுத் தரப்படும்.
மாத ஒருமுறை பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு கல்வி அளிக்கப்படும்.
ஆரோக்கியமான , சுயசார்பான , கூட்டு வாழ்க்கையை வாழும் கல்வி முறையை நெறிப்படுத்தும் மேலும் நெறிப்படுத்தும். எங்களது இந்த சிறுமுயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குவோரை அன்புடன் அழைக்கிறோம்.
தேன்கனி வாழ்வியல் பள்ளி தொடக்க நாள் : 11-10-16 செவ்வாய்க்கிழமை
கலந்தாய்வு நாள் : 2-10-16 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 4.00மணி முதல் மாலை 7.00மணி வரை
இடம் : தேன்கனி வாழ்வியல் மையம்,
1834/7/8, 2வது தளம், P.K.N ரோடு, சங்கீதா லாட்ஜ் அருகில், பழனியாண்டவர் தியோட்டர் பின்புறம், சிவகாசி.
தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு : 9443575431, 98431 27804, 9790279975, 99442 07220
மாற்றத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்....

Wednesday, August 31, 2016

உடலே மருத்துவர்



பிறப்பும், இறப்பும் இனி வீட்டிலே …

நோய் என்னும் நிலையிலிருந்தும், மருந்துகளிலிருந்தும் விடுதலை பெறும் உடலே மருத்துவர் நிகழ்ச்சி :

வணக்கம் நண்பர்களே !
           சிவகாசியில் வானகம் நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவமும் மற்றும் தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பும் நெல்லை மண்டல அக்கு ஹீலர்கள் கூட்டமைப்புடன் இணைந்து ” உடலே மருத்துவர் “ என்கிற நிகழ்ச்சியை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது.

நாள் : 4-9-2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3.45 மணி முதல் 7 மணி வரை
( குறிப்பு : நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வருபவர்களுக்கு மட்டும் அனுமதி. மேலும் நிகழ்ச்சி முழுவதும் கலந்து கொள்ள வேண்டும்)

இடம் : தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு அலுவலகம், பழனியாண்டவர் தியேட்டர் அருகில், சங்கீதா லாட்ஜ்
முன்புறம், சிவகாசி. விருது நகர் மாவட்டம்.
அனுமதி இலவசம்.

முன்பதிவு அவசியம்.
முனப்திவிற்கு :
தேன்கனி 94435 75431, 98431 27804,
96550 51239, , 99442 07220

நிகழ்ச்சியில் :
**
எல்லா விதமான நோய்களில் இருந்தும் மருந்து மாத்திரைகள் இல்லாமல் நிவாரணம் பெறுவது எப்படி?
நோய் வந்தால் என்ன செய்வது? நோய் வராமல் இருக்க என்ன செய்வது ?

இயற்கை வழியில் வீட்டிலேயே சுகப்பிரசவ அனுபவப் பகிர்வு

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற தலைப்பில் அக்கு ஹீலர் அமுதா லெட்சுமிகாந்தன் அவர்கள் பேச இருக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர் :
          ‘’அக்கு ஹீலர் திரு. சாதிக் மன்சூர், தென்காசி அவர்கள். இவர் தன்னுடைய மனைவிக்கு தானே சுகமான முறையில் வீட்டிலே பிரசவம் பார்த்த அனுபவத்தையும், மேலும் பல நோய்களை மருந்து மாத்திரையில்லாமல் அக்கு பங்சர் தொடுசிகிச்சை மூலம் குணமான அனுபவத்தையும் பகிர உள்ளார்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும்
தோழமை அமைப்புகள் :
தமிழர் வாழ்வியல் ஆய்வரன், தாலமுத்து வாழ்வியல் சோலை, விருது நகர் மாவட்ட விவசாயிகள், மரபு விதை நாடோடிகள் மற்றும் பல இயற்கை ஆர்வலர்கள்....

ஆரோக்கியமான வழியில் வளமான சமுதாயத்தை உருவாக்குவோம்,
ஒன்றிைணையுங்கள்....

Friday, August 26, 2016





தேன்கனி மாடி தோட்டப் பயிற்சி முகாம்
நாள்: 28-8-16 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை.....
தொடர்பு: 94435 75431, 98431 27804, 978764 8002.....
நன்கொடை : ரூ.200/-




Friday, July 29, 2016

இயற்கை வழி மானாவாரி விவசாய கருத்தரங்கு

...விதைகளே பேராயுதம்...

தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பு :
       வானகம் ( நம்மாழ்வார் உயிர்சுழல்  நடுவத்தின் குமார் ஐயா, ஏங்கல்ஸ்ராஜா, மற்றும் குமரவேல் ஐயாவின் ) வழிக்காட்டுதலில் விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகளை உள்ளக்கிடய தேன்கனி தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல அமைப்புகளுடன் செயல்பட்டு வந்தாலும் , தன்னுடைய தனித்த தன்மையான நோக்கத்திற்காக 3வது ஆண்டாக கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது.
        தேன்கனியானது விவசாயிகள் , இளைஞர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என பல தரப்பட்டவர்களிடையே தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பு, தேன்கனி வாழ்வியல் மையம் ( பயிற்சி மையம்) , தேன்கனி உழவர் வார சந்தை, தேன்கனி பாரம்பரிய அறுசுவை ருசியம், தேன்கனி மாடி வீட்டுத்தோட்டம், தேன்கனி வாழ்வியல் பள்ளி, தேன்கனி உழவர் பாரம்பரிய விதைகள் என்று பல வழிகளில் இயற்கை விவசாயிகளை தலைமையாகக் கொண்டு  நம்மாழ்வார் ஐயாவின் கொள்கையால் களப்பணியாற்றி வருகிறது.
       இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள் இலவச இயற்கை விவசாய மற்றும் மாடித்தோட்டப் பயிற்சிகள் 15ம் , மூன்று நாள் விவசாய, ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி & உணவகம் சார்ந்த கட்டணப் பயிற்சி 17ம் நடத்தி உள்ளது.
       விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே  நேரடித் தொடர்பை ஏற்படுத்திய தேன்கனி உழவர் வார சந்தை 115 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

மானாவாரி & இயற்கை விவசாயப் பயிற்சி :
       தன்னுடைய பயணத்தின் தொடர்ச்சியாக வானகம் ( நம்மாழ்வார் உயிர்சுழல்  நடுவத்தின் குமார் ஐயா மற்றும் ஏங்கல்ஸ்ராஜா, குமரவேல் ஐயாவின் )  ஒத்துழைப்பில் விருது நகர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒவ்வொரு கிராமத்தையும் நம்மாழ்வார் ஐயாவின் இறுதி லட்சியமான வாழும் கிராம்மாக உருவாக்கும் பணியை மேலும் விரிவுபடுத்த முடிவு எடுத்திருந்திருந்தது.
          அதன் செயல்படுத்தும் விதமாக புலிப்பாறைப்பட்டி இளைஞர்களான செல்வக்குமார் ,செந்தில் மற்றும் ஊர் இளைஞர்களுடன் இணைந்து மானாவாரி & இயற்கை விவசாயப் பயிற்சியை சிவகாசியை அடுத்த புலிப்பாறைப்பட்டியில் ஏற்பாடு செய்திருந்தது.
         பயிற்சியில் 20வயதிலிருந்து 40வயதுள்ள 60 இளம் விவசாயிகளும், 40வயதிற்குள் மேலான 25  விவசாயிகளும், 10பெண்களும் கலந்து கொண்டிருந்தனர். தேன்கனியின் விவசாயிகள் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் என 24பேர் கலந்து கொண்டனர்.

காலை உணவு :
       மானாவாரி பகுதி என்பதாலும் மானவாரி பயிற்சி என்பதாலும் காலையில் நாட்டுக்கம்பு & கேழ்வரகில் செய்த கூழ் காலை உணவாக அளிக்கப் பட்டது. உணவினை புலிப்பாறைப்பட்டி இளைஞர்களான செல்வக்குமார் & செந்திலின் தாய் மற்றும் சித்தி சமைத்திருந்தாகள்.

நிகழ்வு :
    புலிப்பாறைப்பட்டிக்கு வருகை தந்திருந்தவர்களை செல்வக்குமார் அவர்கள் வரவேற்றார். பின்னர் ஊர் பெரியவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தேன்கனியின் நிறுவனர் த.ஞானசேகர் ஐயா அவர்கள்  நம்மாழ்வார் ஐயாபற்றி கூறி நிகழ்சியை வழி நடத்தினார்.
        பின் ஜெ.கருப்பசாமி வானகம் பற்றியும் , குமார் ஐயா மற்றும் ஏங்கல்ஸ்ராஜா, குமரவேல் ஐயா பற்றியும் இன்றைய சூழலில் மானாவாரி விவசாயத்தின் அவசியம் பற்றியும் தன்னுடைய அனுபவத்தை கூறினார். சிவரக்கோட்டை ராமலிங்கம் ஐயா அவர்கள் மானாவரியின் தேவையைப் பற்றியும் , விவசாயத்தின் நெருக்கடி பற்றியும் எடுத்துரைத்தார்.

பூச்சி நீ.செல்வம் :
       பின்னர் தொடர்ந்த பூச்சியல் துறை வல்லுணர். செல்வம் அவர்கள் பூச்சிக் கொல்லிகளின் தீங்கு பற்றி மிகத்தெளிவாக விளக்கினார். குறிப்பாக பூச்சிகொல்லி என்கிற உயிர்கொல்லி மற்றும் வீட்டில் பயன்படுத்தும் கொசுவிரட்டியின் பாட்டில்களில் குறிப்பிட்டிருக்கும், சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்களை விலக்கி அதன் தீமைகளை  கூறும் போது அனைவரின் நெஞ்சிலும் பகிர் என்றது.
      பின் ஒன்றாம் தலைமுறை பூச்சிக் கொல்லி தொடங்கி இந்தியாவில் பயன்பாடில் இருக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வரையிலான அழிவுகளின் எதிரிரொலியே தெருவுக்குத்தெரு கருத்தரிப்பு மையங்கள், மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, சத்துக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் என விளக்கினார்.
   வெளி நாடுகளில் ஏழாம் தலை முறை பூச்சிக்கொல்லிகளே புழக்கத்தில் வந்துவிட்டது எனவும் அதனை நமது மீது திணிக்க வேலைகள் நடந்து வருகிறது எனவும் உண்மை எடுத்துரைக்க இரசாயண விவசாயம் இதுவரை செய்து வந்திருந்த விவசாயி ஒருவருக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது.
       பின்னர் பூச்சிகளின் நண்பர்களை வகைப்படுத்தி, பூச்சிகளை விரட்டுவது பற்றியும் கூறினார். பின் விவசாயிகளின் கேள்விகளான  களைக்கொல்லி, மரபணு பருத்தி, மக்காசோளம், சோயா ஆகியவற்றின் தீமைகளை எடுத்துரைத்தார்.

மதிய உணவு :
    பெரும்பாலான நிகழ்ச்சிகள் எல்லாம் அரசு அல்லது ஏதாவது தொண்டு நிறுவனம் , தனியார் விளம்பர நிறுவனம் நிதி உதவி அளித்து நடைபெறும். ஆனால் வானகம் & தேன்கனி நடத்தும் நிகழ்ச்சிகள் விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்பில் மட்டுமே நடைபெறும் என்பதற்கு மற்றுமொரு நிருபனமாக இந்த நிகழ்ச்சியும் அமைந்தது.
           தாழமுத்து வாழ்வியல் பண்ணை விவசாயி சிறுதானிய அரிசியும், மற்றொருவர் செக்கு எண்ணெயும், கீரை ஒருவர், முருங்கக்காய், கத்தரிக்காய் என ஒருவர், தேன்கனி ருசியக பெண்கள் சமையல், உள்ளூர் குழந்தைகள் , பயிற்சிக்கு வந்திருந்தவர் சமையல் கைக்பக்குவமும் என ஒவ்வொருவர் உழைப்பிலும் மதிய உணவாக வரகு சாம்பார் சாதம், தயிர்சாதம்,  நாட்டு கத்தரிக்காய் பொறிக்கறி, கீரை கூட்டு, மிளகார் குழம்பு என இயற்கை உணவியல் நிபுனர் ஞான சேகரன் ஐயா மேற்பார்வையில் அசத்தி விட்டனர்.


இயற்கை வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் திரு. ஏகாம்பரம் :
        திரு. ஏகாம்பரம் அவர்கள் இயற்கை விவசாயத்தின் சிறப்புகள் பற்றியும் அதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பின் மானாவாரிப் பயிர்களின் பருவங்கள் , பட்டங்கள் பற்றியும், இயற்கை உரம் தயாரிப்புப் பற்றியும் விளக்கினார்.
       தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தின் மூலம் வெற்றி அடைந்த பண்ணைகளைக் கூறினார்.

தேன்கனி விவசாயி.  நாராயணன் & முனியசாமி :
       மானாவாரியில் வாழனும்னு ஆரவமும் , விருப்பமும் இருந்தால் போதும் மகிழ்ச்சி கிடைக்கும். பின்னர் களத்தில் இறங்கி வேலை செய்தால் எளிமையாக கற்கலாம் என இளம் விவசாயி முனியசாமி அனைவருக்கும்  தனக்குள் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையையும், தான் கற்ற அனுபவத்தையும் கூறினார்.

தேன்கனி உழவர் சந்தையின் வெற்றி :
        நேரடியாக சந்தைப்படுத்தும் போது தனக்கு கிடைத்த அனுபவமும், அதனால் தான் அடைந்த பயனும் தேன்கனி உழவர் சந்தையின் வெற்றி குறித்தும் விவசாயி நாராயணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
  
வாழும் கிராமம் செல்வக்குமார் :
      புலிப்பாறைப் பட்டியை வாழும் கிராமக மாற்றி வரும் இளம் வயது செல்வக்குமார் தான் பெற்ற அனுபவத்தையும் அதன் ஏற்பட்ட பலனையும் விவரித்தார். மேலும் நீர் மேலாண்மையின் அவசியத்தையும் அதனை சரி செய்ததால் கடந்த ஆண்டு தன்னுடைய ஊரின் ஆறு, குட்டை, கிணறுகளில் பல வருடங்கள் கழித்து நீரைத் தேக்கிய அனுபவத்தையும் விளக்கினார்.

வாழ்வியல் மருத்துவம் :
         செந்தில் அவர்கள் மருந்தில்லா மருத்துவம் பற்றியும், குழந்தைகளுக்கான வாழ்வியல் கல்விபற்றியும் விளக்கினார். பின் நிகழ்விற்கு வந்திருந்தவர்களும் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை விளக்கினார்கள்.

தேன்கனி உழவர் சந்தை & பாரம்பரி விதைகள் :
     பின்னர் தேன்கனி உழவர்களின் பாரம்பரிய விதைகள் & உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப் பட்டது.  நிகழ்வில் வானகத்தின் சுக்கு, மல்லி, ஆவாரம் பூ தேநீர் காலை மாலை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மழை பாடல் பாடி விழா இனிதே நிறை உற்றது .


115வது தேன்கனி உழவர் சந்தை :
      நிகழ்விற்கு வந்த நண்பர்கள் சிலர் மறுநாள் ஞாயிறு காலை தேன்கனியின் வார சந்தையில் கற்றனர்.
  நிகழ்விற்காக ஒத்துழைத்த  முகநூல் & வாட்ஸாப் நண்பர்கள், ஊடக, செய்திதாள்கள் மற்றும் பசுமைவிகடன் கார்த்திக் போன்றவர்களுக்கும் , மரபுவிதை நாடோடிகள் அமைப்பினருக்கும் தேன்கனியின் மனமார்ந்த நன்றிகள் .

தேன்கனியின் இயற்கைப் பயணம் தொடரும்....























...விதைகளே பேராயுதம்...