Sunday, February 6, 2022



ஒருங்கிணைந்த இயற்கை வழி வேளாண்மை,
மானாவரி வேளாண்மை, தற்சார்பு வாழ்வியல்,
விதை முதல் சந்தைபடுத்துதல் வரை களப்பயிற்சி :
*****************************************************************
#நம்மாழ்வார் ஐயாவிடம்
நான் (ஜெ.கருப்பசாமி) 2012ல்
#வானகத்தில் பயிற்சியின் போது கேட்ட கேள்வி ?
ஐயா இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும் ?
தற்கு ஐயா, வேளாண்மை என்பது பகுதி சார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும்.
அதில் பலதரப்பட்ட அனுபவங்களைக் கற்றுக் கொண்ட இயற்கை உழவர்களை பயிற்சியாளராக பயன்படுத்தி, அவர்கள் கற்ற அனுபவங்களை மற்றவர்களுக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டும். அப்போது பரவாலாக்கிடலாம் ஐயா என்றார்.
அதன் பிறகு வானகம் மூலம் நம்மாழ்வார் ஐயா அவர்களை சிவகாசிக்கு அழைத்து வந்து இயற்கை வேளாண் பயிற்சிகள் நடத்தி ஐயாவின் பணிகளை எங்கள் கையில் கைமாற்றிக் கொண்டோம்.
ஐயாவின் வருகைக்குப் பின் வானகத்தின் முன்னோடிகளின் வழிகாட்டலில் எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, மற்ற இயற்கை அமைப்புகளோடும் ஒன்றிணைந்து 10வருடமாக களப் பயிற்சிகள் நடத்தி வருகிறோம்.

அதன் விளைவாக இன்று பட்டாசு ஆலைகளும், தொழிற்சாலைகளும் மட்டும் நிரம்பியுள்ள எங்கள் பகுதியில் ஒவ்வொரு 10கி.மீட்டர் தொலைவுக்கும் இயற்கை வேளாண்மையை கற்றுக் கொள்ளக்கூடிய பன்முகத் திறன் கொண்ட அனுபவ உழவர்கள் வாழ்கிறார்கள். மேலும் அவர்களில்
• மழையை நம்பிய வானம்பார்த்த மானாவரி வேளாண்காடும்,
• ஆற்றுப்பாசனம் சார்ந்த நெல்வயல்களும்,
• பல்வேறு மரக்கூட்டங்களை உள்ளடக்கிய தோட்டமும்,
• மழைநீர் முழுவதையும் அறுவடை செய்யும் பண்ணைகளும்,
• வாழை, காய்கறிகள், கீரைகளை உற்பத்தி செய்யும் குறு பண்ணைகளும்,
• மரபு விதைகள் பாதுகாத்தல், பரவலாக்கம் செய்தலும்,
• நேரடி சந்தைப்படுத்துதலில் 8ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்மாதிரி “ தேன்கனி உழவர் வாரச் சந்தையும்”
• வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டமும்
• மரபு மருத்துவமும், இயற்கை உணவுத் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களும்,
• குழந்தைகளுக்கான வாழ்வியல் கல்வி முறைகளிலும், தற்சார்பு வாழ்வியலில் கைதேர்ந்தவர்களும் என எங்கள் பகுதி தன்னார்வ இயற்கை களச்செயல்பாட்டாளர்களின் ஒத்துழைப்பால் நம்மாழ்வார் ஐயா விரும்பிய செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்கிறது.


மேலும் பருவகால மாற்றத்தின் விளைவால் ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வெப்பமும், கடும் வறட்சியும், வெள்ளமும், சூறாவளியும் வேளாண்மையைப் பாதித்து வரும் இந்நிலையை நம்மாழ்வார் ஐயா அவர்கள் முன்னரே கணித்துக் கூறியிருந்தவை யாதெனில்,
நாளைய தமிழக வேளாண்மையை வழி நடத்துவதில் மானாவாரி உழவர்களின் பங்கே பெரிதாக இருக்கும். பருவ நிலை மாற்றம் தமிழகத்தின் பெரும் பகுதி நிலங்களை மானாவாரியாகத் தள்ளியிருக்கும். மழையற்ற பகுதி அதிகமாகியிருக்கும். இந்த நிலையில் இன்றைய பாசனப் பகுதி உழவர்கள் பாடம் கற்க வேண்டிய இடமாக, மானாவாரி நிலப்பகுதிகள் இருக்கும்.
மேலும் வழக்கமான ஒற்றைப்பயிர் வேளாண்முறையை மாற்றிய உழவர்களின் பண்ணைகளும், மரங்களுடன் கூடிய திட்டமிட்ட ஒருங்கிணைந்த வேளாண்மையாக மாற்றிய பண்ணைகளுமே, ஏனைய உழவர்களின் கல்லூரியாக இருக்கும் என்பதில் துளியும் மாற்றமில்லை என்றார்.
இதை நன்கு உணர்ந்து கொண்ட எங்கள் ” #தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பானது ” கைதேர்ந்த பன்முக அனுபவங்களை கொண்ட இயற்கை உழவர்களை பயிற்சியாளர்களாக்கி, தொடர்ந்து அனைவருக்கும் பயிற்சிகள் அளித்து வருகிறோம்.
இந்நிலையில் அறுவடைக்குத் தயார்நிலையிலும், பல்வேறு இயற்கை வாழ்வியல் அனுபவங்களை கற்றுக் கொடுக்கத் தயாராக உள்ள ஒருங்கிணைந்த பண்ணைகளையும் தேர்வு செய்து மறுபடியும் வழக்கம்போல், மூன்று நாட்கள் பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி
கீதா இயற்கை வாழ்வியல் பண்ணை :
***********************************************
சிவகாசிக்கு மிக அருகில் பாறைப்பட்டி கிராமத்தில் வேளாண் நிலங்களை வீட்டுமனைகளாகவும், பட்டாசு ஆலையாகவும் விற்பனை செய்துவிட்டு அந்தப் பணத்தை வங்கியில் இருப்பு வைத்து அதில் வரும் வட்டிப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் மத்தியில்,
சூழ்நிலை காரணமாக ஊரை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வாழ்ந்து விட்டு, இன்று சொந்த ஊரில் சொந்த நிலத்தை காடாக மாற்றி பல்லுயிர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற மாற்று எண்ணத்தில் உள்ளவர்கள் தான் திருமதி. கீதா இராதகிருஷ்ணன் தம்பதியினர்.
எங்களுக்கு சென்னையைச் சேர்ந்த பகிர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளரான மலர்விழி அம்மா அவர்கள் மூலமாக அறிமுகமானார்கள்.
தேன்கனி அமைப்பின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு தங்களுக்கு சொந்தமான 3ஏக்கர் நிலத்தை குறைந்த செலவில் காடாக மாற்றும் பணிக்கு 3ஆண்டுகளுக்கு முன்னர் புரட்டாசி மாதம் விஜய தசமி அன்று பனை விதை நடவு செய்து வேலைகளைத் தொடங்கினோம்.
அந்த நிலத்தில் மிகக் குறைந்த நீரில் உணவுக்குத் தேவையான எல்லா வகையான பழமரங்களும், உயிர்வேலி தாவரங்களும், மூலிகைகளும், தழைச்சத்து நிறைந்த தாவரங்களும், அதன் இடையில் ஊடுபயிராக எல்லா வகையான கீரையும், மரபு காய்கறிகளும், மறுவிதைப்புக்குத் தேவையான மாறுபட்ட மரபு விதைகளும் நடவு செய்து தரிசாக நிலத்தில் இன்று அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்பண்ணையின் ஒவ்வொரு அனுபவமும் விரிவாக அடுத்தடுத்தப் பதிவுகளில் பகிர்கிறோம்.
இப்பண்ணை மட்டுமல்ல, இன்று வரை நம்மாழ்வார் ஐயாவால் இச்சமூகத்திலும், நிலத்திலும் ஏற்பட்ட ஏராளமான அனுபவங்களை பகிர நம்மாழ்வார் ஐயாவுடன் தன்னுடைய இளமைக் காலத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்களை மறுசீரமைப்புப் பணியில் ஈடுபடுத்தி இன்று வரை வேளாண்மை தொடங்கி மரபு மருத்துவம் வரை நீண்டகால பயணம் செய்து கொண்டிருக்கும் இயற்கை வாழ்வியலாளர், பயிற்சியாளர்
#வானகம் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) சாலை ஏங்கல்ஸ்ராஜா அவர்களும், இன்னும் பல அனுபவ உழவர்களும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
பயிற்சிகள் அனைத்தும் களப் பயிற்சிகள்..
பயிற்சி நாள் : பிப்ரவரி 11-02-2022
வெள்ளிக்கிழமை காலை 9மணிக்குத் தொடங்கி
13-2-2022 ஞாயிறு மாலை 3மணி வரை
இப்பயிற்சியில்,
• தற்சார்பு வேளாண்மை
•அடுக்கு & கலப்புப் பயிர் சாகுபடிகள்
• கால்காணி ஓர் அறிமுகம்
• மழை நீர் சேமிப்பு
• எளிய சொட்டு நீர் பாசனமுறைகள்
• நிரந்தர வேளாண்மை, காடு வளர்ப்பு,கால்நடைகள் வளர்ப்பு
• விரிவான வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம்
( வீட்டு கழிவுகளைப் பயன்படுத்தி தயாரித்தல் )
• மானாவாரி பயிர் சாகுபடி
• இயற்கை உரங்கள், இடுபொருட்கள் தயாரிப்பு
• இயற்கை உணவு தயாரித்தல்
• உழவர் வாரச் சந்தையும், சந்தைப்படுத்துதலும் அறிமுகம்
• மேட்டுப்பாத்தி, மூடாக்கு அமைத்தல் களப் பயிற்சி
• நாட்டுவிதைகள் பாதுகாப்பு, பரவலாக்கம்..
• பண்ணை வடிவமைத்தல் மற்றும் பல அனுபவப் பகிர்வுகள்….

மேலும்
#தேன்கனி உழவர் வாரச் சந்தை :
மேலும் தேன்கனி உழவர் வாரச் சந்தையை ஞாயிற்றுக் கிழமைகளில் வெற்றிகரமாக 8வது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இதுபோல் ஊரெங்கும் உழவர்களின் நேரடி சந்தை வரவேண்டும் என்பதே விருப்பம். அதற்காக நாங்கள் கற்றுக் கொண்ட அனுபவங்களையும் பகிர உள்ளோம்.
பயிற்சி நடைபெறும் இடம் :
கீதா இயற்கை வாழ்வியல் பண்ணை,
பாறைப்பட்டி, சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.
பயிற்சி நன்கொடை : ரூ. 2,400/-
( தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும். )
*அரசின் கொரானா பேரிடர் விதிகளுக்குட்பட்டு நடைபெறும்.
பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி எண் :
Current A/c Name :
Thenkani Natural Way Products Store
Bank Name : Indian Overseas Bank, Sivakasi.
A/C No : 349002000000182
IFSC Code : IOBA0003490
முன்பதிவு அவசியம்.


30நபர்களுக்கு மட்டுமே அனுமதி...
முன்பதிவிற்கு :
94435 75431,
96554 37242,
97876 48002
பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
கடந்த பயிற்சியின் பதிவுகள் காண :
Facebook/thenkanivalviyalmaiyam/