Tuesday, October 7, 2025

 #என்_விதை...

#என்_உணவு ...

பருவநிலை மாற்றமும், விதையும்

வாருங்கள் உரையாடுவோம்.
விதைகளோடும், விதைகளாய் வாழ்வபரோடும்…


பகுதி – 2
அனுபவப் பகிர்வு :

ஜெ.கருப்பசாமி (5-10-25)


#நம்மாழ்வார் ஐயா நாளும் கூறுவது இனியாரும் கணிக்க முடியாத நிலைக்கு #பருவநிலை மாற்றம் சென்றுவிட்டது.

#விதைக்கும் நேரத்தில் பெய்வதில்லை. அறுக்கும் நேரத்தில் பெய்யும். பகுதி பகுதியாக பெய்த #மழை ஒரேநாளில் பெய்து பின்னர் காய வைத்து சோதித்துவிடும் என்பார்.

#பருவநிலை மாற்றம் பற்றி இங்கு கவலைப்படுவோரோ அல்லது மாற்றுபற்றி யோசித்து தீர்வைப் பற்றி விவாதிப்போரோ இல்லை.

விளைவு கடந்த சில வருடங்களாகவே சீரான பருவநிலை, மழையில்லை என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து வருகிறேன். இதன் விளைவால் சில சில பருவகால ஊட்டச்சத்துமிக்க தனித்துவமான உணவுகளை இனி நாம் நினைத்து கூட பார்க்க இயலாது.

6வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய #தேன்கனி குழுவின் 60 வயதுடைய மூத்த பனை உழவரான திரு. அன்னச்சாமி அவர்கள் கூறியது
"என் வாழ்வில் பனைமரம் வாடி இறந்து பார்த்ததில்லை.. ஆனால் இப்போது நடக்கிறது என்றார்." அவ்வளவு வறட்சி.

பருவநிலை மாற்றம் நடைபெறும் ஒவ்வொரு சூழலிலும் #வேளாண்மை சார்ந்து வாழ்ப்வர்களின் நிலை என்ன ஆகும் என்று பார்ப்போம்.

#பனை சார்ந்த பருவநிலையின் பாதிப்புகள் :

பொதுவாக #பனை மழை நம்பிய மானாவாரி மரப் பயிர். இதற்கு தண்ணீர் தேவையில்லை என்பார்கள். ஆனால் ஒவ்வொரு பருவத்திற்கும் கிடைக்க வேண்டிய தண்ணீரோ, வெயிலோ, காற்றோ, பஞ்சபூதமோ மாறும் போது தண்ணீர் #மழை, சரியாக கிடைக்காவிட்டால் மார்கழி இறுதியில் துவங்க வேண்டிய பதநீர் அறுவடை மாறி அடுத்தடுத்த மாதங்களுக்கு நகர்ந்துவிடும்.

உதாரணமாக நல்ல பருவமழை கிடைத்தால் மார்கழியில் துவங்கி #புரட்டாசி வரை 9 மாதங்கள் பனை சார்ந்த பதநீர், கருப்பட்டி, நொங்கு மற்ற பொருட்களின் அறுவடையும் சிறக்கும். பனைசார்ந்த உழவர்களின் வாழ்வும், அதை நுகர்பவர்களின் வாழ்வும் ஆரோக்கியமும் சிறக்கும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பருவமழை மாறி மாறி அறுவடை மார்கழியில் தொடங்காமல் #தை, மாசி, பங்குனி 3 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் விருதுநகர் பகுதியில் சித்திரையில் மிக மிகக் குறைவாக தொடங்கி ஆடியிலே முடிந்துவிட்டது.

8-9 மாதங்கள் நடைபெற வேண்டிய அறுவடை 3,4 மாதங்களிலே முடிந்துவிட்டது. ஏற்கனவே பனைத் தொழிலில் உள்ள ஆள் பற்றாக்குறை , #அரசு நெருக்கடி, வியாபாரிகள் நெருக்கடியோடு பருவநிலை மாற்ற நெருக்கடி இன்னும் சோதிக்கிறது.

இதே நிலை தான் பருவமழையை நம்பி வேளாண்மை நடைபெறும் #மா, #புளி, #வேம்பு, #கொடுக்காய்ப்புளி இன்னும் ஏராளமான மரப் பயிர்களின் நிலை.

#மானாவாரி குறுகிய கால உணவுப் பயிரின் நிலை :

பொதுவாக குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை உணவான #துவரை பருப்பு ( பயறு) சாகுபடி வயது 6-8 மாதம் முழுமையான விளைச்சலுக்கு. பொதுவாக ஆடிப்பட்டம் விதைத்து பனி காலம் துவங்கும் தை இறுதியிலிருந்து பனிக்காலம் முடியும் சித்திரை மாதம் வரை விளைச்சல் முன்பின் இருக்கும்.

சில மூத்த உழவர்கள் எங்கள் தாத்தா காலத்தில் #வைகாசியிலே விதைத்துவிடுவோம். துவரை மரம் போல் வளர்ந்து விளைந்து தள்ளும். துவரைக் காட்டுக்கு அறுவடைக்கு போவோம்னு சொல்லுவார்கள்.

ஆனால் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில வருடமாக பருவமழை மாறி மாறி சில காலம் கோடைமழை சித்திரை முழுவதும் பெய்து வைகாசி - ஆடி வரை இல்லை. சில நேரம் ஆனி ஆடியில் நன்கு பெய்து அதன் ஈரத்தில் விதைத்து புரட்டாசி, ஐப்பசி கோடைபோல் துளியும் மழை இல்லாமல் கோடை காலமாக மாறி முளைத்த துவரை வாடி கருகி மறு உழவு செய்து வேறு சாகுபடிக்கு மாறியவர்கள் ஏராளம்.

#கொரான ( நாடக) கால ஓய்வுக்குப் பின்னரான 3 ஆண்டுகள் முன்னர் சித்திரை கோடையிலிருந்து ஆவணி புரட்டாசி வரை மாதமாதம் சிறப்பான மழை. எல்லோரும் நினைத்தோம். பல மாதங்கள் சுற்றுசூழல் சீர்கோடுகளுக்கு காரணமாக தொழில் நடக்கவில்லை. ஆகையால் பருவமழை சிறந்தது. இனி நம் வாழ்வும் சிறக்கும் என நம்பினோம்.

முடிய தொழிற்சாலைகள் திறந்தன. முன்பைவிட 24 மணி நேரமும் ஏன் கூடுதல் இயந்திரங்கள் மூலம் இழந்த பொருளாதாரத்தை மீண்டு பிடித்தது. பின் ஐப்பசியில் தொடங்க வேண்டிய அடைமழையும் துவங்கவில்லை. மார்கழியில் துவங்க வேண்டிய முன் பனியும் இல்லை. மாசி பங்குனி சித்திரை பின் பனியும் இல்லை. விளைவு துவரை விதைத்தவர்கள் கார்த்திகையிலே துவரையை உழுது விட்டு அடுத்த குறைந்த வயது 90-110 நாள் கொத்தமல்லி, உளுந்து, பாசி, தட்டை, கொள்ளு, நாட்டுக்கம்பு, வென்சோளம், ஓமம், வெந்தயம், எள்,கடுகு, கடலை, சூரிய காந்தி... பயிர் சாகுபடிக்குத் தயாரானோம்.

ஆனால் முன்னரே கூறியிருந்த ஐப்பசியில் பொய்த்த #மழை கோடையில் வந்தது. விளைவு கார்த்திகையில் விதைத்ததும் பொய்த்தது.

இதே நிலை தான் நீண்ட சம்பா கால பயிர்களான இருங்கு சோளம், வரகு, மிளகாய், பருத்தியில் சோகம் தான்.

அடுத்த 2 ஆண்டுகளாகவும் வைகாசி - புரட்டாசி வரை மழை குறைவு. பெய்தாலும் வலுத்து பெய்து அதை நம்பி தொடரும் என விதைத்து அடுத்தடுத்த மழை இல்லாமல் விதையும், விதையோடு சேர்ந்த எங்களைப் போன்ற உழவரின் வாழ்வும் வெம்பி விட்டது.

அதன் பின் புரட்டாசியில் தொடங்கிய குறுகியகால 90-120 நாள் சாகுபடியும் அறுவடையும் மார்கழியில் மழை முடியாமல் தை வரை நீண்டு பெருமளவு சோசித்ததது.

கடந்த ஆண்டு #2024 தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் ஏரி, குளம், ஆறு நிறைத்து வலுத்து பெய்த மழை விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் ஏரி கூட இன்று புரட்டாசி வரை தரை பார்த்த நிலை தான்.

இன்னும் சில பகுதிகளில் கோடை உழவில் உழுத மண் கட்டிகள் உடைந்து புழுதியாகவில்லை. ஆகையால் இந்தாண்டு துவரையும், மொச்சையும், இருங்கு சோளமும், வரகும் கூட கேள்விக் குறிதான்.

இது உழவர்களுக்கு மட்டுமல்ல. உண்பவர்களுக்கும் தான். வழக்கம் போல் வெளி மாநில அல்லது நாடுகளில் இருந்து இறக்கி #வயிறு நிரப்பினாலும் விலையோ அல்லது நம் மண்ணின் சுவையோ கிடைக்குமா?

இந்த #2025ம் ஆண்டு இன்று புரட்டாசி வரை தமிழகத்தின் பெரும்பகுதி கடும் வறட்சி. விளைவு காடுகளில் வாழ வேண்டிய மயிலும் , மானும் , காட்டுப் பன்றியும், முயலும், அணிலும், சிறு குருவிகளும் குடிக்க நீரில்லாமல் வதங்கி வருகிறது. இதன் காரணமாக விளைநிலங்களில் புகுந்து தோட்டப் பயிர்களான காய்கறிகள், பழங்கள், கீரை என கிடைப்பதை உண்டு வாழ்கிறது.

வழக்கம்போல இயற்கை உழவனே தன் விளைச்சலையும், வாழ்வையும் இழந்து முடிந்தவரை பல்லுயிர்களுக்கும் தன் பட்டினியிலும் உணவளித்து வருகிறோம்.

மனிதர்களோ வழக்கம் போல் உணவு போல், தண்ணீர் போல் ஒன்றை காசு கொடுத்து வயிறு நிரப்பி நோய் பெருக்கி வாழ்கிறோம். இதை #வளர்ச்சி நம்புங்க என்கிறார்கள்.

#தீர்வு தான் என்ன?.

#உழவர்கள் :

இது சமூக மாற்றம் மூலம் நடக்க வேண்டிய பெரும் தீர்வு. அது நடந்தே தீர வேண்டும். இல்லையென்றால் விளைவு கேர முகமுடையது.

நம் கையில் நம்மால் இயன்றதை செய்து நெடுந்தீர்வு நோக்கிப் பயணப் படுவோம்.

1. நிலங்களில் #மழைநீர் சேமிப்புகளைப் பலப்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிடும். அது தேக்கவும், தேவைப்பட்டால் வடிக்கவுமான அகழி, பண்ணை குட்டை போன்ற பலசேமிப்பு முறைகள்.

2. வறட்சியைத் தாங்கும் நம் #மண்ணின் மரங்களை வரப்புகளிலும் , பாதைகளிலும் உள்ளே பயிர் செய்ய ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும். ஏனெனில் பயிர்சாகுபடி மழைக் காலத்திலும், பழ மற்றும் மரப்பயிர்களின் அறுவடை வெயில் காலத்திலும் இருக்கும். இதனால் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு நிகழும் பட்சத்தில் 70சதவீதமாவது உத்திரவாதமாகும்.

3. இனி #ஒற்றைப்பயிர் சாகுபடி என்பது சூதாட்டமே. அதன் விளைவால் இன்று விளைநிலங்களை பொட்டல் நிலங்கள் ஆக்கியது தான் மிச்சம். தண்ணீர் பாய்ச்ச வசதியுள்ள நிலங்களிலும் கூட பாதி மானாவாரிப் பயிரும், மீதி குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிரும், தேவைக்கு தண்ணீர் கூடுதல் பயிரும் மாற்றியமைக்கப் பட வேண்டும்.

உதாரணமாக வரப்பைச் சுற்றி தண்ணீர் குறைவான துவரை, ஆமணக்கு, அகத்தி, சவுண்டல், முருங்கை, மொச்சை, தட்டை, பருத்தி, நிழல் மரங்களும், ஊடே தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களும், அதன் பின் பழமரம் , காய்கறி, கீரை, நெல், வாழை போன்ற தண்ணீர் பாய்ச்சல் பயிர்கள் பகுதிக்கு ஏற்றவாறு, தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.

4. ஒவ்வொரு உழவரிடமோ அல்லது குழுக்களிடமோ பல தரப்பட்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ற சம்பா முதல் குறுகிய கால பயிர்கள் வரைக்குமான விதைகள் சேமிப்பில் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு பயிருக்கான பருவம் தவறினால் உடனே அடுத்த பருவ விதையை பயிர் செய்ய முடியும்..
அப்படி தான் மானாவாரியில் நீண்ட கால துவரை துவங்கி 55-60 நாளில் விளையக் கூடிய காடைக்கன்னி #கருந்தானியம் வரை பயிர்செய்து நம் முன்னவர்கள் காத்தும், மீண்டும் வந்தனர்.

5. பருவமழை #முன்பின் இருப்பதால் கால்நடைகளையோ அல்லது மிகச்சிறிய இயந்திரங்களோ பயன்படுத்தி விதைப்பு, நடவு, களையெடுப்பு, அறுவடைப் பணிகள் செய்யும் நிலைக்கு நம் வேலை திட்டம் வடிவமைக்கப் பட வேண்டும்.

6.. குறிப்பாக #உணவு உற்பத்திக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

7. நம்முடைய நிலத்திற்குள்ளே முடங்கிவிடாமல் வட்டார அளவில் #இயற்கை வேளாண்மையில் கைதேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஒவ்வொரு அனுபவ செயல்பாடுளையும் களத்திலே அவர்களோடு பணி செய்து கற்று நகர வேண்டும்.

8. குறிப்பாக #இரசாயன வேளாண்மை வறட்சியும் தாங்காது. வெள்ளமும் தாங்காது. ஆகையால் நிரந்த தீர்வு என்பது #இயற்கை வழி வேளாண்மை மட்டுமே.

இன்னும் விரிவான நகர்வுகளை நோக்கி நகர #நம்மாழ்வார் ஐயா தன்னுடைய #தாய்மண், #வாழும் கிராமம் போன்ற பல புத்தகத்தில் குறிபிட்டுள்ளார்கள். அதை அடுத்தப் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.

#அரசும், #பொது மக்களும் :

1. ஏரி, குளம், வாய்க்கால்கள் சரி செய்யபட்டு கழிவு நீர் கலக்காமல் வேளாண்மைக்கும், குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும் இருக்கும்படியாக நடைமுறை படுத்த வேண்டும்.

2. காடுகளை பாதுகாத்தால் மட்டும் தான் வனவிலங்குகள் காட்டுக்குள்ளே வாழும். ஆகையால் காடுகளை அழிக்காமல், பணப்பயிர்கள் சாகுபடி செய்யாமல் உணவுக்கும் , பல்லுயிர் பெருக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

3. வட்டாரம், மாவட்ட அளவிலான பருவநிலையை கணித்து தொடர் #முன்னறிவுப்பு செய்ய வானிலை மையங்கள் உருவாக்க வேண்டும்.

4. உழவர்களுக்கான சிறு சிறு களங்களும், எளிய வேளாண்மைக் கருவிகள் வேண்டும்.

5. பொதுமக்களும் #உள்ளூர் உழவர்களை அடையாளம் கண்டு தங்கள் தேவையை அவர்களோடு பகிர்ந்து இயற்கை வழி சாகுபடிக்கு தங்களால் இயன்ற தன்னார்வ உழைப்பை வழங்கி ஆட்பற்றாக்குறையை இயன்றவரை சரிசெய்யலாம். கண்முன்னே நஞ்சில்லா உணவை உறுதி செய்யலாம்.

6. வெளி இறக்குமதியைத் தவிர்த்து உள்ளூர் உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் காலங்களில் #மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை தடை செய்ய வேண்டும்.

இன்னும் இன்னும் ஏராளமான கேள்விகளும், விவாதங்களும் நடைபெற வேண்டும். நிலைத்து நீடித்த வேளாண்மைக்கும், எதிர்கால சந்ததிகளுக்கு நஞ்சில்லா சூழலையும், எந்தவித பருவநிலையையும் சமாளிக்கத் தேவையான விதைகளையும், அனுபவமானவர்களின் அனுபவங்களையும் ஆவணப் படுத்த வேண்டும்.

எனவே நம் #விதை நம் கையில் இருக்க வேண்டும். அப்போது இனிவரும் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டு பல்லுயிர்களுக்குமான உணவை #உத்திரவாதம் செய்ய முடியும்.

உரையாடுவோம் இன்னும் விரிவாக நன்றி..
ஜெ.கருப்பசாமி. 9443575431

Wednesday, September 17, 2025

 #என்_விதை...

#என்_உணவு ...


வாருங்கள் உரையாடுவோம்.
விதைகளோடும், விதைகளாய் வாழ்வபரோடும்…

பகுதி – 1
அனுபவப் பகிர்வு :
ஜெ.கருப்பசாமி (17-9-25)


இன்று உலக அளவில் #பூச்சிக்கொல்லி, #களைக்கொல்லிகள், இரசாயன #உரங்கள், #மரபணு_மாற்றப்பட்ட ( திருத்தம் செய்யப்பட்ட) விதைகளின் பயன்பாடு, நிலத்தடியில் அதிக ஆழத்தில் கிடைக்கும் நீரை சுரண்டுதல் என இயற்கைக்கு விரோதமான செயல்பாடுகள் கூடிக்கொண்டே வருகிறது. இதன் விளைவாக பச்சிளம் குழந்தைகளும் தீராத நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

இதற்கெல்லாம் தீர்வாக #நம்மாழ்வார் ஐயா தன் வாழ்நாள் முழுவதும் கையில் எடுத்த #மானாவாரி ( வானம் பார்த்த சாகுபடி) வேளாண்மை தான். காரணம் குறைந்த பனி நீரிலே விளையும். மேலும் காலம்காலமாக எந்தவித பருவ மாற்றத்தையும், சூழலையும் தாங்கி மரபு அறிவைக் தன்னகத்தே வைத்துள்ளது. அவற்றுள் குதிரைவாலி, வரகு, தினை, இருங்கு சோளம், வென்சோளம், செஞ்சோளம் போன்ற பல சோள வகைகள், நாட்டுக் கம்பு, கேழ்வரகு, காடைக்கன்னி, சாமை போன்ற பல தானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பயறுவகைகள், மரபு நெல், கொத்தமல்லி போன்ற வாசனைப் பொருட்கள் பலபல. அவை இன்றளவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மரபு விதைகளே தலைமுறை தலைமுறையாக கைமாறி உள்ளது. இன்றளவும் அதே வீரியத்தோடும், ஊட்டமிகு உணவாகவும், நோய்நீக்கும் மருந்தாகவும் புழகத்தில் உள்ளது.

இன்றளவும் பெரும்பகுதி உணவுப்பயிர் விளையக் கூடிய நிலங்கள் மானாவரி நிலங்கள் தான். அவை மனிதர்கள் மட்டுமின்றி சாகுபடிக்குப் பிறகு மேய்ச்சல் நிலங்களாக கால்நடைகளுக்கும், குருவி உட்பட பல்லுயிர்களுக்கும் உணவு படைப்பவையாகவே உள்ளது.

இன்றைய சூழலில் வேலையாட்கள் கிடைக்கவில்லை என்கிற குற்றசாட்டு நிலவி வரும் வேளையில் இந்த மானாவாரி சாகுபடி “ விதைப்பு அறுப்பு ( அறுவடை) “ என்கிற தத்துவத்தைக் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் நாம் இன்றுசாகுபடி செய்யும் பரப்பை விட பெரும்பகுதி நிலப்பகுதியில் வேளாண்மை செய்யதார்கள். அவை மேய்ச்சல் நிலங்கள், காடுகளை அடிப்படையாகக் கொண்டு விதைப்பு அறுவடை என்கிற தொழில்நுட்பம் மட்டுமே. அதுவும் சுழற்சி முறையில் குறுகிய காலப் பயிர் தொடங்கி நீண்ட காலப் பயிர் வரை.

முதலில் குறுகிய கால குறுவை சாகுபடி அறுவடையை முடிக்கும் போது நீண்ட சம்பா பயிர்கள் வளர்ந்து கொண்டிருக்கும். இதுபோல் சுழற்சி முறை சாகுபடி செய்து வந்தனர். இதனால் இருக்கும் ஆட்களை வைத்து முறையாக சுழற்சி முறையில் மேலாண்மை நிர்வாகம் செய்து வந்தனர்.

ஆனால் இன்றே இந்த நவீன வேளாண் சாகுபடி எல்லோரையும் பழக்கிய முறை எந்த பயிர்கள் என்றாலும் ”ஒற்றை பயிர் சாகுபடி (Mono Culture)” . அதிக பரப்பு, அதிக விளைச்சல், அதிக லாபம் என்கிற தவறான வழிகாட்டல் முறை. இந்த தவறான விளைவுகளால் வேளாண்மையை விட்டு ஓடியவர்கள் அதிகம் ( ஒருவேளை அவர்களின் சூழ்ச்சி வெற்றி கண்டு இதன் மூலம் நிலங்கள் அவர்கள் கைக்கு மாறுவது தான் என்னவோ? ).

ஆகையால் இனியெனும் விழித்துக் கொள்வோம். பலவிதமான சாகுபடி, பல்லுயிர்களுக்கான சாகுபடி. என்கிற அடிப்படையில் சாகுபடி செய்வோம். இருக்கும் மனித உழைப்பை சுழற்சி முறையில் கையாண்டு திட்டமிடுவோம். அதன் மூலம் விளைந்த்தையே உண்போம்.

இனி வரும் காலங்கள் மானாவாரி சாகுபடிக்கான காலம். நிலம் அறிந்து, பருவம் அறிந்து, விதை அறிந்து, நம் பல அறிந்து, சந்தை அறிந்து சாகுபடி செய்வோம்.

இனி வரக்கூடிய காலங்கள் எச்சரிக்கையாக உணவைத் தேர்வு செய்ய வேண்டிய காலம். மரபணு திருத்தம் செய்யப்பட்ட உணவுகள் இந்தியாவில் சாகுபடிக்கும், சோதனைக்கும் உழவர்களின் நிலங்களுக்கு திணிக்கப்பட்டுவிட்டது. இனி விழிப்போடு சரியான விதை சரியான உணவைத் தேர்வு செய்ய வேண்டிய காலம். தவறினால் நம் சந்ததிகளுக்கு நல்ல உணவையும், பூமியையும் விட்டு கொடுக்கத் தவறிய, அறநெறி வாழ்வியல் தவறிய கொடுங்கோலர்களாவோம்.

தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விரிவாக உரையாடுவோம்.

நன்றி…
ஜெ. கருப்பசாமி இயற்கை உழவர்

#seed #விதை #நம்மாழ்வார் #சிறுதானியம் #இயற்கை #வேளாண்மை #தேன்கனி

Tuesday, May 6, 2025

 #நம்மாழ்வார் ஐயா விரும்பிய சமூக மாற்றம் மென்மேலும் பெருகும்....


#பயிற்சி அனுபவப் பகிர்வு :

#ஜெ.கருப்பசாமி.

#நோய்யில்லாமல்
ஆரோக்கியமாக வாழ்ந்த நம் சமூகம் பெரும் வியாபாரிகளின் சூழ்ச்சியால் ஏதுமறியா குழந்தைகளும், பெண்களும் என எல்லோரும் இரத்த சோகை தொடங்கி, கருப்பை சிக்கல்கள், குழந்தைப்பேறு சிக்கல்கள் உட்ப பல பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.



இதிலிருந்து மீள
#உண்பதை விளைவிப்போம் அல்லது #விளைந்ததை உண்போம் என்கிற #நம்மாழ்வார் ஐயாவின் தத்துவத்தின் அடிப்படையாக வைத்து மண்ணின் மரபு வழிப்பட்ட உணவுக்கான பாடத்திட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கும் மிகச்சீறிய முயற்சியை கடந்த 14 ஆண்டுகளாக #தேன்கனி குழுவினர் செய்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் விளைவிப்பவைகளையும், விளைந்ததையும் எப்படியெல்லாம் உணவாகவும், வாழ்வியலாகவும், அறம் சார்ந்த சந்தைப்படுத்துதலோடு பகிர்தலையும் கைமாற்றிக் கொடுக்க 3நாள் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


இப்பயிற்சி கடந்த #ஏப்ரல் 25 வெள்ளி தொடங்கி 27ஞாயிறுவரை சிவகாசியில் நடைபெற்றது.

#இப்பயிற்சியில்
களத்தில் பல ஆண்டுகளாக திறம்பட களப்பணியாற்றி வரும்
#இயற்கை உழவர்கள், அக்கு ஹீலர்கள் 6நபர்கள், குடும்ப பெண்கள், சமூகப் பணி செய்து வருபவர்கள் என 9நபர்களும், தேன்கனி அமைப்பின் தன்னார்வலர்களும் கலந்து கொண்ட எளிமையான & மிகவும் தனித்திறன் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாக அமைந்தது.

இந்த #நவீன வியாபார உலகில் தான் கற்றவற்றை ரகசியமாக வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் மத்தியில் வழக்கம்போல் #தேன்கனி குழுவினர் தாங்கள் சமூகத்திடம் கற்றவற்றை சமூகத்திற்கே வெளிப்படையாக பகிர்ந்தார்கள்.


இப்பயிற்சியிலும் இயற்கை #வாழ்வியலாளர், யோக கலை நிபுணர், இயற்கை உணவு ஆய்வாளர் தேன்கனி த. ஞானசேகரன் ஐயா அவர்கள் கைவண்ணத்தில் அடுப்பில்லா சமையல் , மூலிகை ரசம், சாறு, பானங்கள், கருந்(சிறு)தானிய சமையல், மரபு அரிசி சமையல் முதல் நவீன உணவுகளையும் மரபு ரகங்கள் வெல்லும் வல்லமையில் களப் பயிற்சியும், சுவையான உனவுகளும் அனைவருக்கும் பகிரப்பட்டது.

மேலும் #தேன்கனி மரபு அறுசுவையத்தின் க.முத்துக்குமார் தன்னுடயை 14 ஆண்டுகால வெற்றிகரமான மரபு இனிப்பு & கார திண்பண்டங்கள், மதிப்பு கூட்டல் உணவுகள், மசாலா பொடி, குளியல் பொடி மற்றும் பல தயாரிப்புகளின் செய்முறை மற்றும் பல நுட்பங்களையும் எளிமையாக கைமாற்றிக் கொடுத்தார்.


மேலும் #இயற்கை வழி உழவரும், பண்ணைக் கருவிகள் வடிவமைபாளரும், மூலிகை மதிப்புகூட்டலில் கைதேர்ந்தவரும் தேன்கனி அ.நாராயணன் அவர்கள் காட்டில் தானாக விளைந்து கிடக்கும் மூலிகைகளில் தேநீர் தயாரிப்பது தொடங்கி இயற்கை வேளாண்மையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மதிப்புகூட்டல் பொருட்கள் தயாரிப்பது, அதை எப்படியெல்லாம் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்துவது குறித்தும் எளிமையாக தன் அனுபவங்களை கைமாற்றிக் கொடுத்தார்.


கூடுதலாக #விளக்கெண்ணெய் தயாரிக்கும் அனுபவங்களையும், அதன் மகத்துவத்தையும் பகிர்ந்தார்.

#இயற்கை வேளாண்மை, #விதை, உணவியலின் பன்முகத் தன்மை, இயற்கை வாழ்வியல், மருத்துவம், தற்சார்பு சந்தைமுறை, உணவு அரசியல், கலப்பட உணவுகள், நவீன உணவுகளுக்கு மாற்றான மரபு உணவுகளின் செய்முறை என போன்ற பல தகவல்களை ஜெ.கருப்பசாமி, க.அருண் சங்கர், செல்வம் போன்றோரும் பகிர்ந்தனர்.

12 வருட வெற்றிகரமான #தேன்கனி சந்தைக்கு களஅனுபவம் பெற எல்லோரும் சென்று உழவர்களோடும், மதிப்புகூட்டல் பொருட்கள் செய்பவர்களோடும், நுகர்வோர்களோடும் கலந்துரையாடினர். மேலும் சந்தையில் ஜெ.சங்கர், அ.நாராயணன், கனகசபாபதி, க.முத்துக்குமார், ஜெ.கார்மேகம், அ.அருண்சங்கர், க.தனசேகர் மற்றும் பலரும் தங்களின் சந்தை அனுபவங்களைப் பகிர்ந்தனர்.





மருந்தில்லா மருத்துவமும், #அக்கு பங்சர் மருத்துவமும் செய்துவரும் திரு. செந்தில் அவர்கள் நோய்யில்லாமல் வாழத் தேவையான இயற்கை வாழ்வியல் நுட்பங்களைப் பகிர்ந்தார்.

இப்பயிற்சி நாளும் சமையலறையில் வாழும் பெண்களை 3நாட்கள் அடுப்படிக்கு விடுதலையளித்து, நல்ல ஓய்வோடும் , சுவையான உணவோடும், மகிழ்வான விளையாட்டோடும் கல்வி கற்கும் தாய்வீடு போல் அமைந்தது..

உணவின் வழியாகவும், வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் மரபு மருத்துவ வழிகாட்டல் மூலமாகவும் தீர்க்க எண்ணெய் குளியல், #புற்றுமண் குளியல், யோக மற்றும் அக்கு பங்சர் மருத்துவம் அனுபவங்களும் பகிரப்பட்டு சில ஆச்சர்யமான அனுபவத்தை பயிற்சியில் பங்குபெற்றவர்கள் அடைந்ததை காண முடிந்தது.

அடுத்த 5 ஆண்டுகளில் #இயற்கை வழி வேளாண்மையும், இயற்கை #உணவு மதிப்புக் கூட்டலும், ஊர்தோறும் உழவர்களின் #சந்தைகளும், ஆடம்பரமில்லா இயற்கை அங்காடிகளும், இயற்கை வாழ்வியல் மையங்களும், இயற்கை வாழ்வியல் முறைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் இன்றைய நிலையை விட பல பலமடங்கு அதிகரிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.


அதற்கு சாட்சியாய் கூட்டம் கூட்டமாக நல்லதொரு வாழ்வியலை தேடுவோர்கள் ஒன்றாக கூடி கற்றும், அதை பிறக்கு கைமாற்றிக் கொடுத்தும், ஒன்றிணைந்து செயல்படுவதுமாக நிகழ்கிறது.

மேலும் தேன்கனி அமைப்போடு பயணிக்கும் ஒவ்வொரு உழவர் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பு என்பது ஒவ்வொரு பயிற்சிக்கும் அசாத்தியமானது.

இப்பயிற்சி எங்களுக்கு பொறுப்பையும், நாம் செல்ல வேண்டிய பாதையையும் மென்மேலும் தெளிவுப்படுத்துகிறது.

நம்மாழ்வார் ஐயாவின் செயலான புழுதியிலும் புழுதியாய் வாழ்பவர்களையும், நலிவுற்று வாழ்பவர்களையும், நவீன சமூகத்தால் கோமாளிகளாக்கப்படும் இயற்கை வாழ்வியளார்களையும், ஆதரவுக்காக ஏங்கும் எளியவர்களையும் ஒருபடி உயர்த்துவதே நம் அனைவரின் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கு தேன்கனி குழுவினர் பெரும் பங்களிப்பை வழங்குவோம்.



இந்நிகழ்வு சிறப்பாக நடக்கவும், சமூகத்திற்கு நற்செயல்கள் நடந்து அனைவரும் நலமாக வாழ “ #கீதா_வாழ்வியல்_மையம் தொடங்கி இயற்கை சேவை செய்துவரும் இராதாகிருஷ்ணன் கீதாம்மா குடும்பத்தினர் அவர்களுக்கும் நன்றிகள் பல.. பல..


இப்பயிற்சி அறிவிப்பை அனைவருக்கும் கொண்டு சேர்த்து உதவிய எங்களோடு நாளும் நட்பாய் பழகுபவர்களுக்கும், முகம் தெரியாத நல்ல நோக்கத்திற்க நாளும் உழைக்கும் சமூக வலைத்தள & ஊடக நண்பர்களுக்கு ம், தன்னார்வலர்களுக்கும், அனைவருக்கும் நன்றிகள் பல பல...

#ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.
இயற்கை வழியில் #ஒற்றுமையாய் வாழ்வோம்.
நன்றி.. நன்றி..

Saturday, April 12, 2025

 ஏப்ரல் 25 சிவகாசியில்

#தேன்கனி குழு & மரபு அறுசுவையகம் நடத்தும்

குடும்பங்களுக்கானகோடைகால சிறப்பு

#மதிப்புக்கூட்டுதல், #சந்தைப்படுத்துதல் & #இயற்கை வாழ்வியல் மூன்று நாள் பயிற்சி :


       இப்பயிற்சி கோடைகாலத்தில் ஆடம்பரமில்லாமல் கிராமத்தில் தற்சார்பு வாழ்வியலையும்,  நல்ல உணவையும், இயல்பான இயற்கை வாழ்வியல் சூழலையும், நல்ல மனிதர்களின் சமூக வாழ்வையும் நம் குடும்பங்களோடு வாழ்ந்தது அனுபவித்து உணர்வதற்கான புத்துணவுப் பயிற்சியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


           மேலும் சிறு வயது முதலே தமிழர்களின் அறம் சார்ந்த வணிக தொழில் முறைகளோடும், சந்தைமுறைகளோடும் வாழ்ந்த நம் சமூகம் அதை மறந்து இன்று நவீன சூதாட்ட வியாபாரிகளின் வியாபரமுறையில் வாழ்வதை மாற்றி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கமான மரபு தொழில்கள் & வணிக வாய்ப்புகளைத் தொடர்வதற்கான வழிகாட்டல் பயிற்சிமுகாம் ஆக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


#நாள் : 25-4-25 #வெள்ளிக்கிழமை  


காலை 9.00 மணி முதல்

27-4-25 #ஞாயிறு மாலை 5 மணி வரை


இடம் : #கீதா_வாழ்வியல்_மையம், (#தேன்கனி இயற்கை உழவர்களின் ஆய்வுப்பண்ணை) #சிவகாசி.


#நம்மாழ்வார் ஐயா 2013ல் சிவகாசியில் நடந்த மதிப்புக்கூட்டல் பயிற்சியில் கூறியது

                      #பசுமைப்_புரட்சியின் கோர விளைவால் பிறந்த #குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை #சத்துணவுப் பற்றாக்குறை, இரத்த சோகையால் என பலசிக்கல்களில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

மண்ணின் #மரபு தானியங்களையும், #பயறு வகைகளையும், காய்கறிகளையும், பழங்களையும், #மழை நீரையும் உண்டு இயற்கையான சூழலில் வாழ்ந்த நம் சமூகம் இன்று, எது சரியான உணவு, சூழல் ? என்பது குறித்து போதிய #விழிப்புணர்வு இல்லாமல் பெரும் நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


         மேலும் உலகமயமாக்கலின் விளைவால் பொது சந்தைகளில் புட்டிகளில் அடைக்கப்பட்ட கலப்படமான, நஞ்சான உணவுகளின் ஆதிக்கமும்,  பொருளாதார இழப்பும் தொடந்து அதிகரிக்கிறது.


         இதன் விளைவால் ஆரோக்கியம்கெட்டு, குடும்பத்தினரின் மகிழ்ச்சியும்கெட்டு, சம்பாதித்த பொருளாதரத்தில் பெரும்பகுதி மருத்துவத்திற்கு செலவிட்டும் இழந்ததை மீட்க முடியவில்லை.


        இதுபோக இன்று பிறக்கும் குழந்தைகளே சர்க்கரை நோய், சுவாசக்கோளாறு முதல் தீராத பல நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நமது அருகிலே #இளம் வயது மரணங்களும் அதிகரிப்பதை அனைவரும் கண்டு வருகிறோம்.


       இன்னும் கூடுதலாக உணவையும், சூழலையும் நஞ்சாக்கும் #மரபணு_மாற்ற_விதை , உணவையும் நம்மிடம் திணிக்க மெத்த படித்த ஆராய்ச்சியாளர்களும், பெரும் நிறுனவங்களும் முயன்று வருகிறது. 


     இவற்றிற்கெல்லாம் மாற்று நோக்கி சிந்தித்து “ அனைவருக்குமான வாழ்க்கையை இன்பமாக்குவது என்பது மிக எளிதானது . அதைத் தான் ” #மாற்றம் என்பது #சொல் அல்ல. #செயல் ” என #நம்மாழ்வார் ஐயா அவர்கள்  நமக்காக செயல் வடிவமாக வழிகாட்டிச் சென்றுள்ளர். அவை



* நம்முடைய சூழலில் நமக்கான உணவை நாமே #உற்பத்தி செய்வது எப்படி ?


* நம்மால் உற்பத்தி செய்ய முடியாதபோது, நஞ்சில்லா உணவு எவ்வாறு #அடையாளம் காண்பது?


* அந்த உணவை சுற்றுசூழலுக்கும், உடலுக்கும் கேடில்லாமல் உணவாக #சமைப்பது எப்படி?


* நம் அன்றாட வாழ்வில் இயற்கையை மிகமிகக் குறைவாக நுகர்ந்து, #மகிழ்வாய் வாழ்வது எப்படி?


* நம் உடலில் தோன்றும் #தொந்தரவுகளை இயற்கை வாழ்வியலில் எவ்வாறு சரி செய்வது?


* நம்முடைய பொருளாதாரத் தேவைகளை இயற்கை அழிக்காமல், இயற்கையோடு இணைந்த #தொழில் முறைகளின் மூலம் பெருக்கிக் கொள்வது எப்படி?



* அடுத்த #தலைமுறைக்கு நம்முடைய வாழ்வியல் முறைகளை கைமாற்றிக் கொடுப்பது எப்படி?


* மனிதன் மட்டுமல்லாது பல்லுயிர்சூழலும் பாதுகாத்து #இயற்கை வாழ்வியலில் மகிழ்வாய் வாழ்வது எப்படி?


என்கிற அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக #நம்மாழ்வார் ஐயா உட்பட பல முன்னோடிகள் இச் சமூகத்தில் தங்களது அனுபவங்களையும், வழிகாட்டலையும் நமக்காக வழிகாட்டி சென்றுள்ளார்கள்.


          அவ்வழியைப் பின்பற்றி நம்முடைய “#தேன்கனி_இயற்கை_வாழ்வியல்_குழு வினர்கள் “ 2011ல் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்தது தொடங்கி இன்று 2025 வரை


* இயற்கை வழி #வேளாண்மை யில் மரபு விதை தொடங்கி #நேரடி_சந்தைப்படுத்துதல் வரை


* சிறுதானியங்கள் முதல் மரபு அரிசிகளில் உணவு #மதிப்புக் கூட்டுதல் தொடங்கி சமையல் பயிற்சிகள் வரை


* யோகா, மரபு வழி #இயற்கை மருத்துவங்கள், வாழ்வியல் முறைகள் வரை


* மரம் நடுதல் தொடங்கி, #சுற்றுசூழல் பாதுகாத்தல், குளம் பராமரித்தல் வரை


* பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பினருக்கும்  கற்றவற்றை #பயிற்சிகள் மூலம் கைமாற்றிக் கொடுத்தல் வரை சிறப்பாகவும், அனைவரோடும் #ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.


 இந்த மிகநீண்ட பயணத்தில் கிடைத்த #வாழ்வியல் அனுபவங்களை கைமாற்றிக் கொடுக்க வருகிற 2025, #மார்ச்28 வெள்ளி முதல் 30 ஞாயிறு_வரை 3நாள் சிறப்பு பயிற்சியாக இயற்கையான சூழலில் ஏற்பாடு செய்துள்ளோம்.


இப்பயிற்சியில்

* மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படைகள்…



* மரபு விதைகள் தேர்வு, நர்சரி, நாற்று வளர்ப்பு, காய்கறி & கீரைகள் என உணவு உற்பத்தி…


* மண் மனம் மாறாத கிராமத்து சமையல், அடுப்பில்லா உணவு முறைகள், சிறுதானியங்கள் முதல் மரபு அரிசிகளில் மதிப்புக்கூட்டல்


* நஞ்சான நவீன  உணவுகளை வென்றெடுக்கும் மரபு  பலகாரங்கள், திண்பண்டங்கள் முதல் மதிப்புக் கூட்டி உணவுகள் வரை….


* ஆரோக்கிய சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்கள் முதல் சமையல் பொடிகள் வரை( பேக்கிங் கலப்பட மசால்பொடிகளுக்கு மாற்றாக), பல்பொடி, குளியல் பொடி, துணி துவைக்கும் பொருட்கள் தயாரிப்பது?


* உடனடித் தாயாரிப்புகளில் ( Ready mix) நவதானிய சத்துமாவு, தோசை மாவு, புட்டு, இடியாப்ப மாவு, முறுக்குமாவு, அடைமாவு மற்றும் பல பல...


* தொட்டிக்குளியல், புற்றுமண் குளியல் , நீராவி குளியல், ஆவிபிடித்தல், மூலிகை சாறு, பானங்கள் தயாரித்தல்


* நமக்கான உடலியல் தொந்தரவுகளை நாமே உணவு, மூலிகைகள், விளையாட்டு மற்றும் இயற்கை வைத்திய முறைகள் & வாழ்வியல் முறைகள் மூலம் சரிசெய்தல்…


* யோகா, கண்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், மரபு விளையாட்டுகள்…


* மதிப்புக்கூட்டிய பொருட்களின் தேவையும், உள்ளூர் சந்தைப்படுத்துதலும்… என இன்னும் இன்னும் சொல்ல முடியாத வாழ்ந்து கற்று உணர வேண்டிய ஏராளமான அனுபவங்களோடும், மரபு உணவுகளை உண்டு  “ கீதா வாழ்வியல் மையத்தின் “ இயற்கை சூழலை அனுபவிக்க குடும்பமாக வருக வருக என வரவேற்கிறோம்.


#பயிற்சி நடைபெறும் இடம் :

#கீதா இயற்கை வாழ்வியல் மையம், (#தேன்கனி இயற்கை உழவர்களின் ஆய்வுப்பண்ணை)

பாறைப்பட்டி, சாத்தூர் சாலை, 

#சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.*


#முன்பதிவிற்கு

+91 94435 75431

+91 96554 37242

+91 97876 48002

+91 90955 63792

முன்பதிவு அவசியம். 

(முன்பதிவு செய்ய கடைசி நாள் ஏப்ரல் 22 வரை )


பயிற்சி பங்களிப்பு பெரியவர்களுக்கு: ரூ.2,600/-

10 முதல் 18வயது குழந்தைகளுக்கு : ரூ. 1,600/- மட்டும்

   *இயற்கையான சூழலில் தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும்.


பணம் செலுத்த வேண்டிய வங்கி எண்

Gpay Narayanan 96554 37242

or 

Current A/c Name :

Thenkani Natural Way Products Store

Bank Name : Indian Overseas Bank, Sivakasi.

A/C No : 349002000000182

IFSC Code : IOBA0003490


பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் #சான்றிதழ் வழங்கப்படும்.


கடந்த பயிற்சியின் பதிவுகள் காண :

https://www.facebook.com/Thenkanivalviyalmaiyam/posts/1172824747970973


https://www.facebook.com/Thenkanivalviyalmaiyam/posts/1173559437897504


https://www.facebook.com/share/p/18iQd5qAgq/


https://www.facebook.com/share/p/1C8RVbFJJR/


https://www.facebook.com/share/p/18ekesF4ju/


https://www.facebook.com/share/p/15uyxj7KW5/


https://www.facebook.com/karuppasamyvanagam/posts/2257854630933589


https://www.facebook.com/karuppasamyvanagam/posts/pfbid07qXEDrYXbCyqEshqhcwJbTWdq5JiGNjV9foLyWnDdrha6kBmd64cnHQ4H6bEds1el


www.thenkanivalviyalmaiyam.blogspot.in


#தேன்கனி குழுவினரின் செயல்பாடுகளில் சிலவற்றை அறிய கீழுள்ள காணொளிகளைக் காணலாம்.


https://www.youtube.com/watch?v=If12bPo0pTQ&t=69s


https://www.youtube.com/watch?v=GxvBWGla9Gs&t=10s


https://www.youtube.com/watch?v=gUSpcbr5bhE


https://www.youtube.com/watch?v=oUjfIZupdp4&t=1s


https://www.youtube.com/watch?v=yNSmdsVkuv0


https://www.youtube.com/watch?v=81raL4SbjSg


https://www.youtube.com/watch?v=3vJkNqt4tF4


www.thenkanivalviyalmaiyam.blogspot.com


#தேன்கனி 

#தற்சார்புபயிற்சி 

#நம்மாழ்வார் #Natutal #Food #organic


உழவையும், உணவையும் மீட்ப்போம்.

இயற்கையோடு இணைந்து பல்லுயிர் சூழலில் வாழ்வோம். நன்றி.

Thursday, April 10, 2025

 சிவகாசியில்

#நம்மாழ்வார் 87ம் பிறந்தநாள் விழா* & கலந்துரையாடல்* :

#நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்
அறிவு மக்களிடத்தில் உள்ளது. அந்த அறிவை உரையாடலில் மூலமாகவே வெளிக் கொண்டு வர வேண்டும்*. இன்று உரையாடாலுக்கு வழியில்லாமல் சிக்கலில் சிக்கியுள்ளோம்.

        நம்மாழ்வார் ஐயா எளிய மக்களிடத்தில் சமமாக அமர்ந்து உரையாடல்கள் , கதைகள், விளையாட்டு, நாடகங்கள் மூலமே தன்னுடைய வாழ்வில் பலரிடமும் கற்றதை பலருக்கும் எளிமையாக கைமாற்றிக் கொடுத்தார்.

        இதை நன்கு உணர்ந்த #தேன்கனி அமைப்பானது ஐயாவின் பிறந்த ஏப்ரல் 6யை இயற்கை வேளாண்மை வாழ்வியலுக்கான சிறு கலந்துரையாடல் நிகழ்வாக கொண்டாட உள்ளோம்.

நாள் : *13-4-2025*
*ஞாயிறு மாலை 3.30 முதல் 6.30 வரை*

இடம் : *கீதா வாழ்வியல் மையம், பாறைப்பட்டி, சாத்தூர்சாலை, சிவகாசி. விருதுநகர் மாவட்டம்*.
https://maps.app.goo.gl/XCNhvcSBj3KWFgac8

நிகழ்வில்
* யார் இந்த நம்மாழ்வார்?
* நம்மாழ்வார் ஐயாவின் தத்துவங்களும், இயற்கை வாழ்வியலும் சாத்தியமா?
* ஐயாவால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?
* நம் வாழ்வு ஆரோக்கியமாகவும், இன்பமாகவும் மாற பின்பற்ற வேண்டிய பாதை எது? போன்ற பல விவாதங்களையும், உரையாடல்களையும் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

*இதை தொடர் மாதாந்திர நிகழ்வாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயா வழியில் பயணித்து வெற்றிகண்ட முன்னோடி இயற்கை உழவர்களும், மரபு வைத்தியர்களும், கல்வியாளர்களும், சுழலியல் ஆர்வளர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்*.

நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவிற்கு உங்களிடமுள்ள *மரபு விதை, வீட்டிலே தயாரித்த இயற்கை உணவுகளை படையலிடலாம். பகிரலாம்.*

எதிர்காலத் தலைமுறைக்கு நல்ல உரையாடல் கொண்ட சமூக அமைப்பை உருவாக்கும் இம்முயற்சிக்கு கரம் கோர்த்து அனைவரும் ஒருங்கிணைவோம்.

*அனைவரும் குடும்பத்தோடு வருக..*

#நம்மாழ்வார் ஐயாவின் *வாழ்வியலை கொண்டாடுவோம்*..

தொடர்புக்கு :
*94435 75431*,
*96554 37242*,
*97876 48002*,
*90955 63792*
www.thenkanivalviyalmaiyam.blogspot.com

#தேன்கனி
#தற்சார்புபயிற்சி
#நம்மாழ்வார் #Natutal #Food #organic

*இயற்கையோடு இணைந்து பல்லுயிர் சூழலில் வாழ்வோம். நன்றி.*

Tuesday, March 11, 2025

மார்ச் 28 சிவகாசியில் இயற்கை வாழ்வியல் பயிற்சி

 

 மார்ச் 28 சிவகாசியில் 

#தேன்கனி மரபு அறுசுவையகம்

நடத்தும்

#மதிப்புக்கூட்டுதல், #சந்தைப்படுத்துதல் &

#இயற்கை வாழ்வியல் மூன்று நாள் பயிற்சி :


#நாள் : 28-3-25 #வெள்ளிக்கிழமை  

காலை 9.00 மணி முதல்

30-3-25 #ஞாயிறு மாலை 5 மணி வரை


இடம் : #கீதா_வாழ்வியல்_மையம், #சிவகாசி.


#நம்மாழ்வார் ஐயா 2013ல் சிவகாசியில் நடந்த மதிப்புக்கூட்டல் பயிற்சியில் கூறியது

                      #பசுமைப்_புரட்சியின் கோர விளைவால் பிறந்த #குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை #சத்துணவுப் பற்றாக்குறை, இரத்த சோகையால் என பலசிக்கல்களில் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

மண்ணின் #மரபு தானியங்களையும், #பயறு வகைகளையும், காய்கறிகளையும், பழங்களையும், #மழை நீரையும் உண்டு இயற்கையான சூழலில் வாழ்ந்த நம் சமூகம் இன்று, எது சரியான உணவு, சூழல் ? என்பது குறித்து போதிய #விழிப்புணர்வு இல்லாமல் பெரும் நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


         மேலும் உலகமயமாக்கலின் விளைவால் பொது சந்தைகளில் புட்டிகளில் அடைக்கப்பட்ட கலப்படமான, நஞ்சான உணவுகளின் ஆதிக்கமும்,  பொருளாதார இழப்பும் தொடந்து அதிகரிக்கிறது.


         இதன் விளைவால் ஆரோக்கியம்கெட்டு, குடும்பத்தினரின் மகிழ்ச்சியும்கெட்டு, சம்பாதித்த பொருளாதரத்தில் பெரும்பகுதி மருத்துவத்திற்கு செலவிட்டும் இழந்ததை மீட்க முடியவில்லை.


        இதுபோக இன்று பிறக்கும் குழந்தைகளே சர்க்கரை நோய், சுவாசக்கோளாறு முதல் தீராத பல நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நமது அருகிலே #இளம் வயது மரணங்களும் அதிகரிப்பதை அனைவரும் கண்டு வருகிறோம்.



       இன்னும் கூடுதலாக உணவையும், சூழலையும் நஞ்சாக்கும் #மரபணு_மாற்ற_விதை , உணவையும் நம்மிடம் திணிக்க மெத்த படித்த ஆராய்ச்சியாளர்களும், பெரும் நிறுனவங்களும் முயன்று வருகிறது. 


     இவற்றிற்கெல்லாம் மாற்று நோக்கி சிந்தித்து “ வாழ்க்கையை இன்பமாக்குவது என்பது மிக எளிதானது . அதைத் தான் ” #மாற்றம் என்பது #சொல் அல்ல. #செயல் ” என #நம்மாழ்வார் ஐயா அவர்கள்  நமக்காக செயல் வடிவமாக வழிகாட்டிச் சென்றுள்ளர். அவை


* நம்முடைய சூழலில் நமக்கான உணவை நாமே #உற்பத்தி செய்வது எப்படி ?



* நம்மால் உற்பத்தி செய்ய முடியாதபோது, நஞ்சில்லா உணவு எவ்வாறு #அடையாளம் காண்பது?


* அந்த உணவை சுற்றுசூழலுக்கும், உடலுக்கும் கேடில்லாமல் உணவாக #சமைப்பது எப்படி?


* நம் அன்றாட வாழ்வில் இயற்கையை மிகமிகக் குறைவாக நுகர்ந்து, #மகிழ்வாய் வாழ்வது எப்படி?



* நம் உடலில் தோன்றும் #தொந்தரவுகளை இயற்கை வாழ்வியலில் எவ்வாறு சரி செய்வது?



* நம்முடைய பொருளாதாரத் தேவைகளை இயற்கை அழிக்காமல், இயற்கையோடு இணைந்த #தொழில் முறைகளின் மூலம் பெருக்கிக் கொள்வது எப்படி?


* அடுத்த #தலைமுறைக்கு நம்முடைய வாழ்வியல் முறைகளை கைமாற்றிக் கொடுப்பது எப்படி?



* மனிதன் மட்டுமல்லாது பல்லுயிர்சூழலும் பாதுகாத்து #இயற்கை வாழ்வியலில் மகிழ்வாய் வாழ்வது எப்படி?


என்கிற அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலாக #நம்மாழ்வார் ஐயா உட்பட பல முன்னோடிகள் இச் சமூகத்தில் தங்களது அனுபவங்களையும், வழிகாட்டலையும் நமக்காக வழிகாட்டி சென்றுள்ளார்கள்.


          அவ்வழியைப் பின்பற்றி நம்முடைய “#தேன்கனி_இயற்கை_வாழ்வியல்_குழு வினர்கள் “ 2011ல் நம்மாழ்வார் ஐயாவை சந்தித்தது தொடங்கி இன்றுவரை


* இயற்கை வழி #வேளாண்மை யில் மரபு விதை தொடங்கி #நேரடி_சந்தைப்படுத்துதல் வரை

May be an image of 8 people, people practising yoga, people performing martial arts and temple

* உணவு #மதிப்புக் கூட்டுதல் தொடங்கி சமையல் பயிற்சிகள் வரை


* யோகா, மரபு வழி #இயற்கை மருத்துவங்கள், வாழ்வியல் முறைகள் வரை


* மரம் நடுதல் தொடங்கி, #சுற்றுசூழல் பாதுகாத்தல், குளம் பராமரித்தல் வரை


* பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பினருக்கும்  கற்றவற்றை #பயிற்சிகள் மூலம் கைமாற்றிக் கொடுத்தல் வரை சிறப்பாகவும், அனைவரோடும் #ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.


 இந்த மிகநீண்ட பயணத்தில் கிடைத்த #வாழ்வியல் அனுபவங்களை கைமாற்றிக் கொடுக்க வருகிற 2025, #மார்ச்28 வெள்ளி முதல் 30 ஞாயிறு_வரை 3நாள் சிறப்பு பயிற்சியாக இயற்கையான சூழலில் ஏற்பாடு செய்துள்ளோம்.



இப்பயிற்சியில்

* மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், இயற்கை வழி வேளாண்மையின் அடிப்படைகள்…


* மரபு விதைகள் தேர்வு, நர்சரி, நாற்று வளர்ப்பு, காய்கறி & கீரைகள் என உணவு உற்பத்தி…


* மண் மனம் மாறாத கிராமத்து சமையல், அடுப்பில்லா உணவு முறைகள், சிறுதானியங்கள் முதல் மரபு அரிசிகளை உணவு முதல் திண்பண்டங்கள் வரை மதிப்புக் கூட்டி சமைத்தல்….



* பல்பொடி, குளியல் பொடி, துணி துவைக்கும் பொருட்கள் தொடங்கி அடுப்படிக்குத் தேவையான சமையல் பொடிகள் வரை தயாரிப்பது ( பேக்கிங் கலப்பட மசால்பொடிகளுக்கு மாற்றாக)


* புற்றுமண் குளியல் , நீராவி குளியல், ஆவிபிடித்தல், மூலிகை சாறு, பானங்கள் தயாரித்தல்


* இயற்கை வைத்திய முறைகள் & வாழ்வியல் முறைகள்…


* யோகா, கண்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், மரபு விளையாட்டுகள்…


* மதிப்புக்கூட்டிய பொருட்களின் தேவையும், உள்ளூர் சந்தைப்படுத்துதலும்… என இன்னும் இன்னும் சொல்ல முடியாத வாழ்ந்து கற்று உணர வேண்டிய ஏராளமான அனுபவங்களோடும், மரபு உணவுகளை உண்டு  “ கீதா வாழ்வியல் மையத்தின் “ இயற்கை சூழலை அனுபவிக்க குடும்பமாக வருக வருக என வரவேற்கிறோம்.


#பயிற்சி நடைபெறும் இடம் :

#கீதா இயற்கை வாழ்வியல் மையம்,

பாறைப்பட்டி, சாத்தூர் சாலை, 

#சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.*


*#முன்பதிவிற்கு 

+91 94435 75431

+91 96554 37242

+91 97876 48002

+91 90955 63792

முன்பதிவு அவசியம். 

(முன்பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 25வரை )


பயிற்சி பங்களிப்பு : ரூ.2,600/-

   இயற்கையான சூழலில் தங்குமிடம், இயற்கை உணவுகள் வழங்கப்படும்.


*பணம் செலுத்த வேண்டிய வங்கி எண்

Gpay Narayanan 96554 37242

or 

Current A/c Name :

Thenkani Natural Way Products Store

Bank Name : Indian Overseas Bank, Sivakasi.

A/C No : 349002000000182

IFSC Code : IOBA0003490


பயிற்சியின் இறுதியில் பங்கேற்புச் #சான்றிதழ் வழங்கப்படும்.


கடந்த பயிற்சியின் பதிவுகள் காண :

https://www.facebook.com/share/p/1C8RVbFJJR/


https://www.facebook.com/share/p/18ekesF4ju/


https://www.facebook.com/share/p/15uyxj7KW5/


https://www.facebook.com/karuppasamyvanagam/posts/2257854630933589


https://www.facebook.com/karuppasamyvanagam/posts/pfbid07qXEDrYXbCyqEshqhcwJbTWdq5JiGNjV9foLyWnDdrha6kBmd64cnHQ4H6bEds1el


www.thenkanivalviyalmaiyam.blogspot.in


#தேன்கனி குழுவினரின் செயல்பாடுகளில் சிலவற்றை அறிய கீழுள்ள காணொளிகளைக் காணலாம்.

https://www.youtube.com/watch?v=If12bPo0pTQ&t=69s


https://www.youtube.com/watch?v=GxvBWGla9Gs&t=10s


https://www.youtube.com/watch?v=gUSpcbr5bhE


https://www.youtube.com/watch?v=oUjfIZupdp4&t=1s


https://www.youtube.com/watch?v=yNSmdsVkuv0


https://www.youtube.com/watch?v=81raL4SbjSg


https://www.youtube.com/watch?v=3vJkNqt4tF4


#தேன்கனி 

#தற்சார்புபயிற்சி 

#நம்மாழ்வார் #Natutal #Food #organic


இயற்கையோடு இணைந்து பல்லுயிர் சூழலில் வாழ்வோம். நன்றி.