Thursday, July 28, 2016

தேன்கனி வாழ்வியல் மையம்

தேன்கனி வாழ்வியல் மையம் மற்றும் மரபு விதை நாடோடிகள் சார்பாக விருதுநகரில் நடைபெற்ற கருத்தரங்களில் மரபுசுவை மற்றும் உடல் சார்ந்த புரிதல் பற்றி நிகழ்வு ந்டைபெற்றது....

அந்நிகழ்வு பற்றி தகவல்கள் .....





மரபு விதை நாடோடிகள் - சூலை மாத ஒருங்கிணைவு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (17/06/16) மாலை நமது 'மரபு விதை' அமைப்பின் சூலை மாத ஒருங்கிணைப்புக் கூட்டம் இயற்கையின் - (மழை) ஆசிர்வாதத்துடன் இனிதே நடைப்பெற்றது.( இவ்வளோ வேகமாக பகிர்கின்றீர்களே ? - காதில் கேட்கிறது). மாலை 4 மணிக்கு திட்டமிட்டக் கூட்டம் மழையினால் 5 மணிக்கு தொடங்கப்பட்டது. 'மரபு விதை' குடும்பத்தினர் சுமார் 25 நபர்கள் கலந்துக் கொண்டனர். 
நிகழ்வின் தலைப்பு 'உடலுக்கு எல்லாம் தெரியும்' மற்றும் 'மரபுச்சுவை'. உடல் நலம் பற்றிய கலந்துரையாடலை புலிப்பாறைப்பட்டி தொடுச்சிகிச்சையாளர் திரு.செந்தில்குமார் முன்னெடுத்துச் சென்றார். உடல் பற்றிய அடிப்படை புரிதல்கள், நோய் மற்றும் அறிகுறிகள் பற்றிய விளக்கம், அதற்கான தீர்வுகள் என அமைந்தது, அனைவரும் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டு பங்குபெற்றனர். திரு.செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்Selvakumar Alagarsamy இருவரும் அவர்களது கிராமத்தில் ஐயா நம்மாழ்வாரின் வழி பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்துவருகின்றனர். 'வாழும் கிரமாம்' ஆக தனது கிராமத்தை மாற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு 'புலிப்பாறைப்பட்டி நண்பர்கள்' என்ற அமைப்பினை வழிநடத்திச் செல்கின்றனர். மரபுச்சுவை பற்றிய கலந்துரையாடலை முன்னெடுத்துச் சென்ற அண்ணன். முத்துக்குமார், தேன்கனி வாழ்வியல் மையம், சிவகாசி, தனது அனுபவத்தின் வாயிலாக உணவு பழக்கங்கள் பற்றியும், இன்றைய நாளில் உணவுப்பொருட்களில் கலக்கும் நச்சுப் பொருட்கள் பற்றியும் விளக்கினார். பாரம்பரியமாகவே மதிப்புக்கூட்டல் பொருட்கள் செய்துவரும் முத்துக்குமார் அவர்கள் சிறுதானியங்களில் நொறுக்கு தீனிகள் செய்வது பற்றியும், கடலை எண்ணெயின் முக்கியதுவம் பற்றியும் கூறினார். அடுத்ததாக நண்பர் கார்மேகம், Thenkani vazhviyal maiyam , சிவகாசி, அவர்கள் 115 வாரங்களாக உழவர்களின் நேரடி சந்தை நடந்துவருவது பற்றியும், அதில் மக்களிடம் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றியும் எளிய நடையில் விளக்கினார். அதே வேளையில் மதுரையிலிருந்து குடும்பத்துடன் கலந்துக் கொண்டு சிறப்பித்த அண்ணன் Surendran Nath அவர்கள் மனம் பற்றிய விசயங்களை எடுத்துக் கூறியது அனைவருக்கும் பிடித்திருந்து, உழவர்களின் நேரடி சந்தையை உருவாக்கும் தொடக்கமாக செக்கில் ஆட்டிய எண்ணெய்கள், சர்க்கரை, கருப்பட்டி மற்றும் சிறுதானிய நொறுவைகள், இயற்கை வாழ்வியல் பற்றிய புத்தகங்கள் என சந்தைபடுத்தப்பட்டன, அனைத்தும் இயற்கை வழி முறையில் தயாரிக்கப்பட்டு, அதை தயாரித்த நபர்களாளே நேரடியாக சந்தையும் படுத்தப்பட்டது, உழவர்களின் நேரடி தளமாக செயல்படுவதே நம் அமைப்பின் நோக்கம்.. நிகழ்வினை ஏற்பாடு செய்து, சிறப்புடன் நிறைவு செய்தது வரை அனைத்துவகையிலும் உறுதுணை செய்யத நண்பர் Saravanan Balasubramanian க்கு நன்றிகள்.
தமக்குள் நிகழ்வின் பொருளாதார அம்சங்களை பங்கிட்டுக் கொண்ட Prof.R.சண்முகவேல், Prof.P.K.Periyasami raja, Menakai KannanAmutha Sargurunathan & சற்குருநாதன் மற்றும் Saravanan balasubramanian அனைவருக்கும் அன்பும் நன்றியும், மானாமதுரை சீமை யிலிருந்து கலந்துக் கொண்ட அன்பர்களுக்கும் நன்றி. அடுத்த மாதத்திற்கான நிகழ்வு விரைவில் அறிவிக்கபடும்..

No comments:

Post a Comment