வெள்ளை சர்க்கரை, மைதா மாவு - விஷம்
பரோட்டாவின் கதை -பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சினை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது, நாம் பிறந்த நாள் கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிக்கப்படுகிறது..?
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயல் பெராக்சைட் (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் ‘டை’ யில் உள்ள ரசாயனம்.
இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவுக்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccharine , Ajino motto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இவை மைதாவை அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் உண்டு பண்ணப் பயன்படுகிறது. ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரிழிவு வர காரணமாகிறது.
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் .
இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.
Europe union, UK, China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் , இருதய கோளாறு , நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர் .
No comments:
Post a Comment